LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சுற்றுச்சூழலில் இந்தியா உலக நாடுகளின் வரிசையில் 155வது இடம் !! மிக மோசமான நகரம் டெல்லி !!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக நாடுகளின் வரிசையில், இந்தியா, 155வது இடத்தில் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

சர்வதேச சுற்றுபுற சுழல், காற்றின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் இந்தியா, சீன, சிங்கப்பூர் உட்பட 178 நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

 

இந்த ஆய்வு முடிவில், இந்தியா, 155வது இடத்தையும், சீனா, 118வது இடத்தையும், பிரேசில், 77வது இடத்தையும், ரஷ்யா, 73வது இடத்தையும், தென் ஆப்ரிக்கா, 72வது இடத்தையும் பிடித்தன. உலக தரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், அசுத்தமான வாயுக்கள் கலந்து, காற்றின் தரம் மிகக் குறைவாகக் காணப்படுகிறது. தனி மனித சுகாதார பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது; 

 

உலக நாடுகளில் சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளுடன், இந்தியாவும் வளர்ந்து வரும் சந்தையைக் கொண்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் விஷயத்தில், மற்ற வளரும் நாடுகளின் பின்னால் இந்தியா உள்ளது வருந்த தக்க விசயமாகும்.

 

சுவிட்சர்லாந்து,  லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் சுத்தமான நாடுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த அறிக்கையில், சுற்றுச் சூழலில் மிகவும் மோசமான நகரமாக டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி வாகனங்கள் அதிகரிப்பால் காற்று மாசுப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங் இதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

 

கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 123வது இடத்தை பிடித்த இந்தியா இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 155 வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 29 Jan 2014  0 Comments
Tags: சுற்றுச் சூழல்   இந்தியா   உலகின் மிக மோசமான நகரம்   டெல்லி   டெல்லி நகரம்   155 வது இடம்   Delhi  
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !! உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!
சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன் சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்.... ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....
இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான  வாழ்த்துக்கள்.... இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.