LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF
- மற்றவை-வகைப்படுத்தாதவை

தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை

தென்னை விவசாயிகளின்; கருத்துக்கு தென்னை வைத்தால் தின்றுவிட்டு சாவோம்! பனையை வைத்தால் பார்த்துட்டு சாவோம்! என்ற பழமொழிக்கு ஏற்ப தென்னை வைக்க முன் வந்தார்கள்.

தென்னை ஓரளவுக்கு வறட்சியையும் தாங்;கி வளரக்கூடிய பயிர். மேலும் அதிக வேளையாட்கள் தேவைப்படாது. 3- 5 வருடங்கள் வரை ஊடு பயிர் வைத்துக் கொள்ளலாம். காயும் அறுவடை செய்ய உகந்தது 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காயை அறுவடை செய்யலாம்.

தென்னை விவசாயத்தில் அதிக லாபம் பெற தேங்காயாக விற்பனை செய்வதை விட மதிப்பூட்டல் செய்து கொப்பரையாக விற்றால் அதைவிட பன்மடங்கு லாபத்தை ஈட்டித் தரக் கூடியது. பொதுவாக தென்னை விவசாயிகள் அவற்றை உருட்டு காண்ராக்டாக வியாபாரிக்கு கொடுப்பார்கள்.

வியாபாரிகள் தேங்காய் வெட்டும் பொழுது நன்றாக இருக்கும் காய்களை எடுக்துக் கொண்டு சிறிய காய்களை கழித்து போட்டு விடுவார்கள் அதனால் நமக்கு இழப்புதான். இதுமட்டும் அல்லாது கைகாய் என்று 100 காய்களுக்கு 5 காய் என்று எடுப்பார்கள்.

தேங்காய் விலைக்கு எடுக்கும் பொழுது ஒரு காய் ரூ 5 - 6 என்று தான் எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விற்பனை செய்யும் பொழுது ஒருகாய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள்.இவற்றை தவிற்கவும் மேலும் கூடுதல் விலை பெறவும்.

தென்னை விவசாயிகள் அவற்றை கொப்பரை தேங்காயாக மதிப்பூட்டல் செய்து மாற்றி விற்பனை செய்தால் மேலும் அதிக லாபம் பெறலாம்.

கொப்பரையில்கிடைக்கும் லாபம்

தேங்காயை உரித்து போடும் பொழுது உரிமட்டையையும் விற்பனை செய்யலாம்.
ஒரு கிலோ ரூ 1.50 க்கும்,

கொட்டாங்குச்சி ஒரு கிலோ ரூ. 10 க்கும் விற்பனை செய்யலாம்.

கொப்பரையாக காயவைத்து விற்றால் ஒரு கிலோ 100 - 105 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

நமக்கு ஒரு காய் விலை 10- 15 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

1000 தேங்காய் உரித்து போட்டால் 100 கிலோ பருப்பு கிடக்கும் 
இவற்றை எண்ணை ஆக ஆட்டி விற்றால் இன்னும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தென்னை விவசாயிகள் தேங்காயாக விற்பனை செய்வதை விட்டு விட்டு கொப்பரை அல்லது எண்ணையாக மதிப்பூட்டல் செய்து அதிக லாபம் பெற முன்வருவோம்.

தென்னை மரம் வைத்திருப்போர் தினம் தினம் காற்று அடித்தால் அல்லது மரத்திலேறி காய் பறிக்க முடியாமல் இருந்தாலும் அந்த காய்கள் ஒவ்வொன்றாக கீழே விழும். அவற்றை சேர்த்து வைக்க முடியாமல் விற்றுவிடுவோம் அல்லது உறவினர்களுக்கு கொடுத்துவிடுவோம் நமக்கு முதல் சேராது.

தேங்காயாக சில்லரையில் விற்பது கை வந்து சேராது இவற்றை தவிர்க கொப்பரையாக மதிப்பூட்டல் செய்யலாம். இது பழனிச்சாமி என்ற தென்னை விவசாயி கூறிய கருத்து.

 

நன்றி: Rsgaseed

by Swathi   on 28 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று!!!  இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.. இன்று!!! இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..
தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி  தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்! தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்!
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன் இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.