பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் விரைவில் ரஜினி, கமலை வைத்து, எந்திரன் 2, இந்தியன் 2 ஆகிய படங்களை இயக்கப் போகிறாராம்.
தற்போது ஐ படத்தை இயக்கி முடித்து விட்ட ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியை வைத்து எந்திரன்-2வை முதலில் தொடங்குகிறாராம். அதையடுத்து, கமலை வைத்து இந்தியன்-2வை இயக்குகிறாராம்.
தற்போது விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள கமல், அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் ஆகிய படங்களில நடிப்பதால், இந்த படங்களை முடித்து விட்டு ஷங்கர் இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த இரண்டு படங்களுமே இதுவரை எந்த தமிழ் படங்களும் உருவாகாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிறதாம்.
|