ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடுவது தற்போதைய தமிழ் சினிமாவின் பேஷனாகி விட்டது.
இந்த பேஷன் ரஜினி, கமல் தொடங்கி விஜய், சிம்பு, தனுஷ், விஷால், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என்று பல ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் பின்னணி பாடி வருகிறார்கள்.
ஹீரோக்களே தாங்கள் நடிக்கும் படங்களில் பாடுவதால், ரசிகர்கள் மத்தியில் அவர்கள் பாடும் பாடல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
இந்நிலையில் தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜயசேதுபதியையும் படத்தில் பாடச்சொல்லி ஏற்கனவே வற்புறுத்தி இருக்கிறார்களாம். இதுவரை அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த அவர், தற்போது தான் தயாரித்து, வசனம் எழுதி நடித்து வரும் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் முதன்முறையாக பின்னணி பாடுவதற்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.
அதனால், அவருக்கு பொருத்தமான பாடல் உருவாக்கும் பணிகள் தற்போது நடக்கிறதாம். எனவே கூடிய சீக்கிரத்தில் விஜய் சேதுபதி குரலில் ஒரு பாடலை கேக்கப்போவது உறுதி தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
|