அஜீத், திரிஷா, அனுஷ்கா, ஆகியோர் நடித்து வரும் புதிய படம் என்னை அறிந்தால்.
இந்த படத்தை கவுதம் மேனன்தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, கவுதம் மேனனையும் சேர்த்து இந்த படத்தில் 3 இயக்குனர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.
படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்தான் என்றாலும், இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர், திரைக்கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவனுடன் இணைந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளனர்.
தியாகராஜன் குமாரராஜா ஆரண்யகாண்டம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர். இந்த 3 இயக்குனர்களின் உழைப்பில் ‘என்னை அறிந்தால்’ தயாராகியுள்ளது.
இப்படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
|