LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1022 - குடியியல்

Next Kural >

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான்-முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்படும் இரண்டினையுமுடைய இடையறாத செயலால்; குடிநீளும்-ஒருவனது குடி உயரும். ஆள்வினை ஆண்டு நடத்துஞ் செயல். ஆனுதல்-நிறைதல். அறிவுநிறைதலாவது இயற்கை யறிவோடு செயற்கையறிவுஞ் சேர்தல். ஆள்வினை சோம்பலை நீக்கற்கும் ஆன்றவறிவு வெற்றிபெறச் சூழ்தற்கும் வேண்டியனவாம். ’நீள்வினை’ விடாமுயற்சி. குடிநீள்தல் தொடர்தலும் உயர்தலும்.
கலைஞர் உரை:
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த மன உறுதிக்குத் துணையாக) விடாமுயற்சி, காரியத்துக்கு வேண்டிய அறிவு ஆகிய இரண்டும் எப்போதும் சேர்ந்திருக்கும்படி காரியம் செய்தால் குடித்தனம் உயர்வடையும்.
Translation
The manly act and knowledge full, when these combine In deed prolonged, then lengthens out the race's line.
Explanation
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.
Transliteration
Aalvinaiyum Aandra Arivum Enairantin Neelvinaiyaal Neelum Kuti

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >