LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

ஆயிரம் பொய் சொல்லித்தான் ஒரு கல்யாணம் செய்யணுமா?

 

“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணனும்” என்று சொல்லிக் கொண்டு எப்படியாவது திருமணம் முடிந்தால் சரியென்ற மனநிலையில் பலர் நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் இப்படி பொய் சொல்லி ஒரு திருமணம் முடிப்பது நல்லதா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?!
சத்குரு:
ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பு பெரும்பாலான பெண்கள் பொருளதாரரீதியாக ஆண்களை சார்ந்து இருந்தார்கள். பெற்றோர் வீட்டில் இருந்தவரை அப்பாவையும், தமையன்களையும் செலவுகளுக்கு எதிர்பார்த்திருந்தார்கள். திருமணமாகி கணவனின் வீட்டுக்குக் குடிபெயர்ந்தபோது அந்த வீட்டைச் சேர்ந்த ஆண்களின் நிழலிலேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில், குறிப்பிட்ட சில சமூகங்களில், பெண்களுக்குத் திருமணம் செய்து அனுப்புவது என்பது பெற்றோருக்குப் பெரும் சுமையாக இருந்தது. அந்த அடிப்படையில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.
திருமணம் நடந்தால்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. இன்றைக்கு அந்தப் பேச்சுக்கே அவசியமில்லாத அளவு பெண்கள் யாரையும் சார்ந்தில்லாமல் தனித்து நிற்கத் துணிந்து விட்டார்கள்.
ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்குப் போய், பொய்யை ஆதாரமாகக் கொண்டால், தவிர்க்க முடியாமல், நீங்கள் பல வேதனைகளை சந்திக்க நேரும்.
பொய்களை அஸ்திவாரமாகப் போட்டு நடந்த திருமணங்களில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும், இருவரது குடும்பங்களும் பல வேதனைகளைச் சந்தித்துவிட்டார்கள். இது முற்றிலும் மாற்றப்பட வேண்டிய நிலை.
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் முற்றிலும் ஏற்றுக் கொள்வதற்குப் பொய்கள் சரியல்ல. திருமணம் என்பது உண்மைகளின் அடிப்படையிலும், நம்பிக்கையின் ஆதாரத்திலும் நடந்தால்தான், வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்.
இனியாவது, இது போன்ற மூடத்தனமான நம்பிக்கைகளை முற்றிலுமாக விட்டொழித்து விட்டு வாழ்க்கையை நேர்மையாக அணுகுங்கள்.
ஆயிரம் பொய்களைவிட ஓர் உண்மை மேலானது.

“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணனும்” என்று சொல்லிக் கொண்டு எப்படியாவது திருமணம் முடிந்தால் சரியென்ற மனநிலையில் பலர் நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் இப்படி பொய் சொல்லி ஒரு திருமணம் முடிப்பது நல்லதா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?!


சத்குரு:


ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பு பெரும்பாலான பெண்கள் பொருளதாரரீதியாக ஆண்களை சார்ந்து இருந்தார்கள். பெற்றோர் வீட்டில் இருந்தவரை அப்பாவையும், தமையன்களையும் செலவுகளுக்கு எதிர்பார்த்திருந்தார்கள். திருமணமாகி கணவனின் வீட்டுக்குக் குடிபெயர்ந்தபோது அந்த வீட்டைச் சேர்ந்த ஆண்களின் நிழலிலேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில், குறிப்பிட்ட சில சமூகங்களில், பெண்களுக்குத் திருமணம் செய்து அனுப்புவது என்பது பெற்றோருக்குப் பெரும் சுமையாக இருந்தது. அந்த அடிப்படையில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.


திருமணம் நடந்தால்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. இன்றைக்கு அந்தப் பேச்சுக்கே அவசியமில்லாத அளவு பெண்கள் யாரையும் சார்ந்தில்லாமல் தனித்து நிற்கத் துணிந்து விட்டார்கள்.

ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்குப் போய், பொய்யை ஆதாரமாகக் கொண்டால், தவிர்க்க முடியாமல், நீங்கள் பல வேதனைகளை சந்திக்க நேரும்.


பொய்களை அஸ்திவாரமாகப் போட்டு நடந்த திருமணங்களில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும், இருவரது குடும்பங்களும் பல வேதனைகளைச் சந்தித்துவிட்டார்கள். இது முற்றிலும் மாற்றப்பட வேண்டிய நிலை.


பரஸ்பரம் ஒருவரை ஒருவர் முற்றிலும் ஏற்றுக் கொள்வதற்குப் பொய்கள் சரியல்ல. திருமணம் என்பது உண்மைகளின் அடிப்படையிலும், நம்பிக்கையின் ஆதாரத்திலும் நடந்தால்தான், வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்.


இனியாவது, இது போன்ற மூடத்தனமான நம்பிக்கைகளை முற்றிலுமாக விட்டொழித்து விட்டு வாழ்க்கையை நேர்மையாக அணுகுங்கள்.


ஆயிரம் பொய்களைவிட ஓர் உண்மை மேலானது.

by Swathi   on 27 Mar 2014  0 Comments
Tags: aayiram poi kalyanam   kalyanam aayiram poi   kalyanam   aayiram   poi   kalyanam   ஆயிரம் பொய் கல்யாணம் கல்யாணம் ஆயிரம் பொய்  
 தொடர்புடையவை-Related Articles
குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. - வித்யாசாகர்! குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. - வித்யாசாகர்!
பொய்யாய் வாழாதே பொய்யாய் வாழாதே
ஆயிரம் கால் மண்டபம் - மதுரை ஆயிரம் கால் மண்டபம் - மதுரை
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - இப்படியும் ஒரு படத்தின் தலைப்பு !! வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - இப்படியும் ஒரு படத்தின் தலைப்பு !!
விவசாயிகள் இனியும் காத்திருக்க முடியாது!: ஆறுபாதி கல்யாணம் பேட்டி விவசாயிகள் இனியும் காத்திருக்க முடியாது!: ஆறுபாதி கல்யாணம் பேட்டி
அஜீத் புதிய படத்தில் பெயர் என்ன தெரியுமா ? அஜீத் புதிய படத்தில் பெயர் என்ன தெரியுமா ?
ஆயிரம் பொய் சொல்லித்தான் ஒரு கல்யாணம் செய்யணுமா? ஆயிரம் பொய் சொல்லித்தான் ஒரு கல்யாணம் செய்யணுமா?
ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம் !! ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.