LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1154 - கற்பியல்

Next Kural >

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.
தேவநேயப் பாவாணர் உரை:
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின்-தலைநாளில் எதிர்ப்பட்டபோதே பேரன்பு செய்து, நின்னிற் பிரியேன், அஞ்சேல் என்று தேற்றியவர் தாமே பின் மாறாப் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ-அவரிடத்தன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யென்று நம்பியவரிடத்துக் குற்ற முண்டோ? சொன்னதை நிறைவேற்றாமைக் குற்றம் அவரிடத்துத் தங்காவறு செலவழுங்குவி என்பது கருத்து. 'தேறியார், என்பது தன்னைப் பிறர் போற் கூறிய தன்மைப் படர்க்கை. ஒகாரவினா எதிர்மறைக் குறிப்பினது.
கலைஞர் உரை:
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) அபயம் கொடுத்து, 'நான் இருக்கிறேன்; நீ அஞ்ச வேண்டாம்' என்று சொன்ன காதலர் இப்போது 'பிரிந்து போகிறேன்' என்றால். அதற்காக அவரை மறுத்துப் பேசத் துணிந்துவிட்டதில் எனக்கென்ன குற்றம்?
Translation
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word?.
Explanation
If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.
Transliteration
Aliththanjal Endravar Neeppin Theliththasol Theriyaarkku Unto Thavaru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >