இங்கு சப்தகன்னியர் மூலவராக அருள்பாலிப்பது சிறப்பு.எழுவரைமுக்கி கிராமத்தில் சப்தகன்னியர் எழுவருடன், அய்யனார் மற்றும் முத்துப்பார்வதி அம்மன் ஆகியோரையும் சேர்த்து 9 தெய்வங்களைத் தரிசிக்கலாம்! அய்யனார் இந்த ஊரின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார்.
பொதுவில் எல்லை தெய்வமாக நாமறியும் அய்யனார் குறித்து, வித்தியாசமான ஒரு தகவலைச் சொல்கிறார்கள் இந்த ஊரைச் சேர்ந்த பக்தர்கள். நதிகளை உரிய பருவத்தில் உருவாக்கி அவற்றை சரியான பாதையில் வழி நடத்தி உலகிற்கு நன்மை செய்பவன் வருணன். அதனால் வருணனை மலைகளின் தெய்வம் என்றே வேதங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அத்ரி என்றால் மலை என்று பொருள். அத்ரிவன் என்பது வருணனின் ஒரு பெயராகும். வருணன் சட்டங்களின், தர்மத்தின் தலைவன் ஆவான். எனவேதான் தர்மசாஸ்தா என்று அவனைக் குறிப்பிடுவர். புறநானூறும் அறப்பெயர்ச் சாத்தன் எனச் சிறப்பிக்கிறது என்கிறார்கள். |