கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து லிங்கத்தை வழிபட்டால் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபட்டால்
பெரிய அளவிலும் தெரிகிறது. சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட அபூர்வ சிவலிங்கத்தை இங்கு தரிசிக்கலாம்.வெண்பனி உறைந்த கயிலையில் வாழும்
ஈசன், இங்கும் வந்து அமர்ந்ததால் திருவெண்காடர் எனப்படுகிறார். மழை இல்லாத காலத்தில், இவருக்கு தாரா அபிஷேகம் மற்றும் ஹோமம்
செய்தால் உடனடியாக மழை வருகிறது. தாராஹோமம் செய்யும் போது கருடன் வட்டமிடுவது சிறப்பு. சனீஸ்வரனின் சிற்பம் சிறப்பான முறையில்
வடிக்கப்பட்டுள்ளது. இவரிடம் முறையிட்டால், எதிரி பயம் நீங்கும், என்கிறார்கள்.இங்குள்ள அம்பாளை வாடாகலை என்கின்றனர். ஆயகலைகள் 64ம்
அன்னையின் திருவடியில் அமர்ந்ததாலும், 32 லட்சணங்களுடன் சிலை வடிவமைக்கப்பட்டதாலும் இப்பெயர் பெற்றாள். அம்பாளுக்கு திங்கள், வெள்ளி,
பவுர்ணமியில் பால், தேன், சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுகிறது. தற்போது கோயில் சிதிலமடைந்துள்ளது. அருள்
நந்தி அடியார் பேரவையினர் இரண்டு கால பூஜை செய்கின்றனர். கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடக்கிறது.
கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து லிங்கத்தை வழிபட்டால் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபட்டால் பெரிய அளவிலும் தெரிகிறது. வெண்பனி உறைந்த கயிலையில் வாழும் ஈசன், இங்கும் வந்து அமர்ந்ததால் திருவெண்காடர் எனப்படுகிறார். மழை இல்லாத காலத்தில், இவருக்கு தாரா அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தால் உடனடியாக மழை வருகிறது.
தாராஹோமம் செய்யும் போது கருடன் வட்டமிடுவது சிறப்பு. இங்குள்ள அம்பாளை வாடாகலை என்கின்றனர். ஆயகலைகள் 64ம் அன்னையின் திருவடியில் அமர்ந்ததாலும், 32 லட்சணங்களுடன் சிலை வடிவமைக்கப்பட்டதாலும் இப்பெயர் பெற்றாள். அம்பாளுக்கு திங்கள், வெள்ளி, பவுர்ணமியில் பால், தேன், சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுகிறது. தற்போது கோயில் சிதிலமடைந்துள்ளது. |