இங்குள்ள இரண்டு மூலவர்களில் ஒருவரான பள்ளத்துடையார் சுயம்புவாகத் தோன்றியவர் என்பது தலத்தின் சிறப்பு.மேற்குத் தொடர்ச்சி மலையின்
அடிவாரத்திலும், பச்சையாற்றின் கரையிலும் அமைந்துள்ள அழகான கிராமம்தான் பத்தை. மன்னர்கள் காலத்தில் முள்ளி நாட்டுச் சதுர்வேதி மங்கலம்
என்று இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. பத்தை கிராமத்துக்கே புகழ் சேர்க்கும் அளவில் இந்த
குலசேகரநாதர் ஆலயம் உள்ளது. பத்தை ஆலயத்தில் இரு லிங்கத் திருமேனிகள் உண்டு. பிரதானமாக லிங்கத் திருமேனி குலசேகரநாதர்,
குலசேகரமுடையார் என்றும், பிரதானமான அம்மன் சுகந்த குந்தளாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். கோயில் மேற்கு திசை நோக்கி
அமைந்துள்ளது. குலசேகரநாதருக்கு வட திசையில் - கொஞ்சம் பள்ளம் போன்ற இடத்தில் அருள் பாலித்து வரும் இன்னொரு லிங்க மூர்த்தி, சுயம்பு
ஆகும். பள்ளத்துடையார் என்பது பொதுவான பெயர். இந்த லிங்கத் திருமேனிக்கு திருபுரஹரேஸ்வரர், ஆதிநாதர், தானெழுந்த நாயனார், பழையோன்
ஆகிய திருநாமங்கள் உண்டு. இந்தக் கருவறைக்குத் தெற்கே நின்ற கோலத்தில் அருள் புரியும் அன்னை ஆவுடைநாயகி, கோமதி அம்மன், திரிபுரசுந்தரி
ஆகிய திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள். இந்த சுயம்பு லிங்க மூர்த்தியை காமதேனு வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. குலசேகரநாதருக்கு
முன்பிருந்தே இந்த சுயம்பு மூர்த்தி அருள் புரிந்து வருவதால், ஆதி நாதர் என்கிற பெயர் இவருக்கு வந்தது. பத்தை கிராமத்திலும், இதைச் சுற்றியுள்ள
ஊர்களிலும் உரிய பருவத்தில் மழை பெய்யாமல் போனால், பள்ளத்துடையார் சந்நிதியில் நீர் நிரப்பி, அவருக்கு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்
ஊர்மக்கள், அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மழை எப்படியும் கொட்டித் தீர்த்து விடுமாம். அப்படி ஒரு சக்தி பள்ளத்துடையாருக்கு உள்ளது.
இங்குள்ள இரண்டு மூலவர்களில் ஒருவரான பள்ளத்துடையார் சுயம்புவாகத் தோன்றியவர் என்பது தலத்தின் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும், பச்சையாற்றின் கரையிலும் அமைந்துள்ள அழகான கிராமம்தான் பத்தை. பத்தை ஆலயத்தில் இரு லிங்கத் திருமேனிகள் உண்டு. பிரதானமாக லிங்கத் திருமேனி குலசேகரநாதர், குலசேகரமுடையார் என்றும், அம்மன் சுகந்த குந்தளாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.
குலசேகரநாதருக்கு வட திசையில் அருள் பாலித்து வரும் இன்னொரு லிங்க மூர்த்தி, சுயம்பு ஆகும். பள்ளத்துடையார் என்பது பொதுவான பெயர். இந்த லிங்கத் திருமேனிக்கு திருபுரஹரேஸ்வரர், ஆதிநாதர், தானெழுந்த நாயனார், பழையோன் ஆகிய திருநாமங்கள் உண்டு. இந்தக் கருவறைக்குத் தெற்கே நின்ற கோலத்தில் அருள் புரியும் அன்னை ஆவுடைநாயகி, கோமதி அம்மன், திரிபுரசுந்தரி.
முன்பிருந்தே இந்த சுயம்பு மூர்த்தி அருள் புரிந்து வருவதால், ஆதி நாதர் என்கிற பெயர் இவருக்கு வந்தது. பத்தை கிராமத்திலும், இதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உரிய பருவத்தில் மழை பெய்யாமல் போனால், பள்ளத்துடையார் சந்நிதியில் நீர் நிரப்பி, அவருக்கு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மழை எப்படியும் கொட்டித் தீர்த்து விடுமாம். அப்படி ஒரு சக்தி பள்ளத்துடையாருக்கு உள்ளது. |