பெண் வீட்டுக்காரன் பெரியவனா, மாப்பிள்ளை வீட்டுக்காரன் உயர்ந்தவனா என்ற சண்டை நம் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் நடக்கும் பிரச்னை. இரண்டும்
சமம் தான்; இதில் உயர்வு தாழ்வுக்கே இடமில்லை என இந்த பிரச்னைக்கு முதல் முற்றுப்புள்ளி வைத்தவள் அன்னை உமையவள் தான். தன் கணவரையும்,
அண்ணனையும் ஒருசேர காணும் எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. சிவபெருமான் நாராயணருடன் இணைந்து, சங்கரநாராயணராக அவளுக்கு காட்சி தந்தார்.
இந்தக் காட்சி சாதாரணமாக கிடைத்து விடுமா? அதற்காக "தபஸ்' (தவம்) செய்தாள். அதையே "ஆடித்தபசு' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
இந்த விழா திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசேஷம். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலும் ஒரு சங்கரன்கோவில்
உள்ளது. இதை "தெற்கு சங்கரன்கோவில்' என்பர். தாமிரபரணியும், மணிமுத்தாறும் கலக்குமிடத்திலுள்ள இந்த கோயிலும் தபசு விழாவுக்கு வெகு பிரசித்தம்.
இங்குள்ள சிவன், ராகு, கேது அம்சமாக இருப்பது சிறப்பம்சம்.
பெண் வீட்டுக்காரன் பெரியவனா, மாப்பிள்ளை வீட்டுக்காரன் உயர்ந்தவனா என்ற சண்டை நம் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் நடக்கும் பிரச்னை. இரண்டும் சமம் தான் இதில் உயர்வு தாழ்வுக்கே இடமில்லை என இந்த பிரச்னைக்கு முதல் முற்றுப்புள்ளி வைத்தவள் அன்னை உமையவள் தான். தன் கணவரையும், அண்ணனையும் ஒருசேர காணும் எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. சிவபெருமான் நாராயணருடன் இணைந்து, சங்கரநாராயணராக அவளுக்கு காட்சி தந்தார்.
இந்தக் காட்சி சாதாரணமாக கிடைத்து விடுமா? அதற்காக "தபஸ்' செய்தாள். அதையே "ஆடித்தபசு' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்த விழா திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசேஷம். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலும் ஒரு சங்கரன்கோவில் உள்ளது. இதை "தெற்கு சங்கரன்கோவில்' என்பர். தாமிரபரணியும், மணிமுத்தாறும் கலக்குமிடத்திலுள்ள இந்த கோயிலும் தபசு விழாவுக்கு வெகு பிரசித்தம். இங்குள்ள சிவன், ராகு, கேது அம்சமாக இருப்பது சிறப்பம்சம். |