மூலவர் செல்லியம்மன் அஷ்ட தஜ புஜங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் தைமாதம் 3வது செவ்வாய்க்கிழமை கொடை நடத்தும் விழா நடைபெறும். ஊர் மக்களும், வெளியூரில் வாழும் பக்தர்களும் இணைந்து சீரும், சிறப்புமாக அம்மனின் விழாவை நடந்தி தேவியின் அருளைப் பெறுகிறார்கள்.
கொடைக்கு முதல்நாள் திங்கள்கிழமை அம்பாளுக்கு லலிதா சஹஸ்ர நாம லட்சார்ச்சனையும், கும்ப ஜெபமும், குங்குமம் அபிஷேகமும் நடைபெறும். மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் எல்லாவிதமதான அபிஷேகமும் சிறப்பான முறையில் செய்து நடைபெற்று, இரவு 11 மணிக்கு அம்பாள் சந்தன அலங்காரத்துடன் மிக அற்புதமாக காட்சி கொடுப்பாள்.
லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து சிறப்பு தீபாராதனை செய்வார்கள். இரவு 12 மணியளவில் கோயில் நித்ய பூஜை செய்யும் பூசாரி படையல் பூஜையை பிரமாதமாக செய்வார். |