LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

நவீனத் தொழில்நுட்பத்தில் வரும் பான் 2.0 கார்டு

 

நிரந்தரக் கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும்​தான் என்ற நிலை மாறி​விட்​டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்​கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்​தமான பரிவர்த்​தனை​களுக்கும், தங்கம், நிலம் போன்ற முதலீடுகளுக்கும் பான் கார்டு கட்டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதனால்​தான் வருமான வரிதா​ரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்த​போ​திலும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்கியுள்​ளனர்.


இந்நிலை​யில், பான் 2.0 திட்​டத்தை செயல்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பயனர்​களின் பயன்​பாட்டை மேம்​படுத்து​வதற்​கும் தொழில்​நுட்ப முன்னேற்​றங்​களுடன் இணைப்​ப​தற்​கும் வரிவசூல் தொடர் கண்காணிப்பு அமைப்புக்கும் இது உதவும். இதற்காக ரூ.1,300 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.


பழைய பான் கார்டு வைத்​திருப்பவர்கள் கவலைப்​படத் தேவை​யில்லை. ஏற்கெனவே உள்ள பான் கார்டு வைத்​திருப்​பவர்கள் மேம்​படுத்​தப்​பட்ட அமைப்​பின் கீழ் புதிய பான் கார்​டுக்கு புதிதாக விண்​ணப்​பிக்கத் தேவை​யில்லை. தற்போதைய செல்லுபடி​யாகும் பான் கார்​டுகள் வைத்​திருப்​பவர்​கள், புதுப்​பித்தல் அல்லது திருத்தம் கோரி, புதிய அட்டைக்கு விண்​ணப்​பிக்​கலாம். இதனால் உங்கள் நிரந்தரக் கணக்கு எண்ணை மாற்றாமலேயே, பான் 2.0 இன் கீழ் QR குறி​யீட்​டைக் கொண்ட புதிய அட்டைக்கு விண்​ணப்​பிக்​கலாம்.


அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடு​களில் தனிநபர் அடையாள அட்டை என்ற சமூகப் பாது​காப்பு எண் (SSN), தனிப்​பட்ட வரி செலுத்து​வோர் எண்(UTR) போன்றவை அனைத்து விதமான காப்​பீடு, பணப்​பரிவர்த்​தனை​களுக்கும் பயன்​படுத்​தப்​படு​கிறது. இதன் மூலம், ஒரு தனிநபரின் அனைத்து விதமான நிதி, மற்றும் அது சார்ந்த பரிவர்த்​தனை​கள், வருமான வரி என அனைத்​தும் ஒருங்​கிணைக்​கப்​படு​கிறது.


அதேபோல், பான்  2.0 திட்டம் தடையற்ற டிஜிட்டல் செயல்​முறைகள் மற்றும் வலுவான தரவு பாது​காப்புடன் வரி செலுத்துவோர் பதிவை மேம்​படுத்த உலகளாவிய தரநிலைகளுடன் செயல்​படுத்​தப்​படு​கிறது. 


உலகளாவிய சிறந்த நடைமுறை​களுக்கு ஏற்ப இந்தியா​வின் வரி முறையை நவீனமய​மாக்கி ஒருங்​கிணைப்​பதன் மூலம் வரி செலுத்து​வோர் மிக​வும் நெறிப்​படுத்​தப்​பட்ட மற்றும் ​திறமையான அனுபவத்தைப் பெறலாம். இந்த ​முன்​முயற்சி, சேவைகளை எளி​தாக்குவது மட்டுமல்​லாமல், தரவு பாது​காப்பு மற்றும் வெளிப்​படைத்​தன்​மையை உறு​தி​செய்து, சிறந்த வரி இணக்​கம் மற்றும் நிர்​வாகத்தை வளர்க்​கும்​ என நம்​பப்​படுகிறது.

 

 

by hemavathi   on 09 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சீனப் பெருஞ்சுவரை  நடந்து கடக்க எவ்வளவு நாள்கள் ஆகும் தெரியுமா? சீனப் பெருஞ்சுவரை நடந்து கடக்க எவ்வளவு நாள்கள் ஆகும் தெரியுமா?
இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?
சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம் சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு
இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது
வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்! வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்!
மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம் மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.