அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)
மணக்குடவர் உரை:
அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும்.
ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை;
பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படி யெல்லாம் சிந்தித்துப் பார்த்தாலும்) பொறாமை யினால் செல்வம் பெருகினவர்களும் இல்லை; பொறாமை இல்லாமல் செல்வப் பெருக்கம் இல்லாது போனவர்களும் இல்லை என்பதுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அதனால் பொறாமை யுள்ளவனிடத்தில் செல்வமிருப்பதற்கும் பொறாமை இல்லாதவ னிடத்தில் வறுமை இருப்பதற்கும் வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.
Translation
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
Explanation
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
Transliteration
Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar
Perukkaththil Theerndhaarum Il
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்