|
||||||||
குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி |
||||||||
![]()
சீன விஞ்ஞானிகள் மனிதக் கருவைச் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான சீனா, 'ரோபோட்டிக்' தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. அங்குச் சமீபத்தில் தானியங்கிகள் விற்பனைக்கு என்றே பிரத்தியேக வணிக வளாகம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த 'கைவா தொழில்நுட்பம்' நிறுவனம் கருவைச் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் திறன் உடைய எந்திர மனிதனை உருவாக்கும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஆய்வுக்குச் சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மருத்துவர் ஜாங் கிபெங் தலைமை தாங்குகிறார்.
இந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றால், மலட்டுத்தன்மை உள்ள தம்பதியர் அல்லது உயிரியல் கர்ப்பத்தை விரும்பாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து விஞ்ஞானி ஜாங் கிபெங் கூறுகையில், “இந்தத் தொழில்நுட்ப ஆய்வு தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளது. எந்திர மனிதனின் வயிற்றில் செயற்கை கருப்பையை பொருத்தி, செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்யப்படும். கரு அதில் வளரும். இந்த எந்திர மனிதனின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகும்,” என்றார்.
இந்தத் தொழில்நுட்பம், 2017ல் செயற்கை கருப்பை திரவத்துடன் கூடிய, 'பயோபேக்' மூலம் ஆடுகள் கருவிலிருந்து வளர்க்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
இந்தத் தொழில்நுட்பம் வெற்றியடைந்தால் ,தாயுடன், கருவில் வளரும் குழந்தைக்கு எப்படிப் பிணைப்பு ஏற்படும், அதற்கு மன ரீதியாக என்ன தாக்கம் ஏற்படும் போன்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
|
||||||||
by hemavathi on 17 Aug 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|