LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா

''இன்றைய இந்தியா சர்வதேச விண்வெளி விண்வெளியிலிருந்து பார்க்கும்போது, லட்சியம் உள்ளதாகவும், அச்சமற்றதாகவும், தன்னம்பிக்கையாகவும், பெருமை நிறைந்ததாகவும் தெரிகிறது,'' எனச் சர்வதேச விண்வெளி மையத்தில் வழியனுப்பு விழாவில் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா கூறினார்.

சர்வதேச விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவினர், நாளை( ஜூலை 14) மாலை 4:35 மணிக்குப் பூமிக்குத் திரும்புகின்றனர் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து விண்வெளி மையத்தில் சக வீரர்கள் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்கு வழியனுப்பு விழா நடத்தினார்கள். அதில் சுபான்ஷூ சுக்லா பேசினார். "இந்தப் பயணம் நம்ப முடியாத வகையில் அமைந்தது. இதில் ஈடுபட்டோரின் கடுமையான உழைப்பு காரணமாக இந்தப் பயணம் அற்புதமாக அமைந்தது.

எனது விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்தாலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்ற இந்தியாவின் திட்டமும் நீண்ட தூரத்தில் உள்ளது. நாம் ஒரு தீர்மானம் எடுத்தால், நட்சத்திரத்தையும் எட்ட முடியும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன்.

41 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் ராகேஷ் சர்மா, விண்வெளிக்குச் சென்று, அங்கிருந்து இந்தியா எப்படி இருந்தது என்று எங்களிடம் கூறினார். இன்று இந்தியா எப்படி இருக்கிறது என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள் என்பதையும் தெரிவித்தார்.

இன்றைய இந்தியா விண்வெளியிலிருந்து பார்க்கும் போது, லட்சியம் உள்ளதாகவும், அச்சமற்றதாகவும், தன்னம்பிக்கையாகவும், பெருமை நிறைந்ததாகவும் தெரிகிறது. இன்றைய இந்தியா, முழு உலகத்தையும்விட சிறப்பாகத் தெரிகிறது. விரைவில் சந்திப்போம்" என்றார். 

 

 

by hemavathi   on 13 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
“விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிகிறது” -விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா “விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிகிறது” -விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா
பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன் பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன்
குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி
புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன் புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன்
விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம்
செயற்கை இரத்தத்தை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை செயற்கை இரத்தத்தை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை
சுபான்ஷு சுக்லா  விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.