LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- செய்திகள்

செயற்கை இரத்தத்தை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை

ஜப்பானில் செயற்கை இரத்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜப்பானின் செயற்கை ரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவச் சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள செயற்கை இரத்தம் அனைத்து இரத்த வகைகளுக்கும் பொருந்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது,​​அதன் மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜப்பானின் செயற்கை ரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவச் சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமையிலான குழு, இந்தச் செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த ரத்தத்தை இரண்டு வருடங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலாவதியான இரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினைப் பிரித்தெடுத்து இந்தச் செயற்கை ரத்தம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, இரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் இரத்தத்திற்கு 42 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் உண்டு. அதுமட்டுமின்றி, ரத்தம் பெறுபவரின் இரத்த வகையுடன் பொருந்துமா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஆனால், இந்தச் செயற்கை இரத்தத்திற்கு அந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

தற்போது, தன்னார்வலர்களிடம் இந்தச் செயற்கை ரத்தம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2030-க்குள் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அவசர மருத்துவ உதவிகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

by hemavathi   on 11 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
“விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிகிறது” -விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா “விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிகிறது” -விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா
பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன் பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன்
குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி
புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன் புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன்
சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா
விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம்
சுபான்ஷு சுக்லா  விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.