|
||||||||
அயலகத் தமிழர் நல வாரியத்தில் இணைவது எப்படி? |
||||||||
வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காகத் தமிழர்கள் அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்வது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டு, அதன்மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி, வெளிநாட்டு அயலகத் தமிழர் மற்றும் வெளிமாநில அயலகத் தமிழர் ஆகிய பிரிவுகளின் கீழ் வாரியத்தில் தங்களை உறுப்பினராக இணைத்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர் ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகை சந்தாக்களில் விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்து பயனடையலாம். இதுதவிர தீவிர மற்றும் தொடர் சிகிச்சைக்குத் தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு தொகைக்கு ரூ.1 முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள சந்தாக்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
அயல்நாடு தமிழர் இறக்கும் நிலையில், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி நிலைக்கேற்பக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அதேபோல, அயல்நாடு தமிழர் இறக்கும் நிலையில், திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன் மற்றும் மகளுக்குத் திருமண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
இந்தத் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை https://nrtamils.tn.gov.in என்ற தளத்திலும், இந்தியாவுக்குள் 18003093793 என்ற தொலைப்பேசி எண்ணிலும், அயல்நாடுகளிலிருந்து 8069009901 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு இலவசமாகத் தெரிந்து கொள்ளலாம்.
|
||||||||
by hemavathi on 15 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|