LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

முதல் தலைமுறைச் சான்றிதழ் பெறுவது எப்படி?

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு கட்டணச் சலுகையை வழங்கிவருகிறது.

அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்தாய்வு மூலம் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காகச் சாதிப் பாகுபாடு இல்லாமலும் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் அந்த மாணவர்களின் தொழிற்கல்விக் கட்டண (Tuition Fee) செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் சுய ஆதரவுப் படிப்புகளில் (செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) படிக்கச் சேரும் மாணவர்களுக்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழு (ஏ..ஐ.சி.டி.இ.) முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்குகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கச் சேரும் 5 சதவீத மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர்களுடைய பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை உண்டு. தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணச் சலுகை தகுதியுள்ள இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் பெறுவதற்குப் பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இ-சேவை மையங்களின் மூலம் இணையம்வழி விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, அரசு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசு ஆணையும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால், முதலில் பட்டம் பெறுபவரே இந்த முன்னுரிமையைப் பெற முடியும். அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும்பட்சத்தில் அக்குடும்பத்தில் முதலில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும் முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) வழங்கப்படும். பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில் இரட்டையர்கள் இருந்தால், அவர்கள் இருவருக்கும் இந்தச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு வயது வரையறை கிடையாது.

எந்த ஆண்டு பட்டப் படிப்பை முடித்திருந்தாலும் முதல் பட்டதாரி சான்றிதழைப் பெறலாம். உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தின் மூலம் இந்தச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டுத் தகுதியுடையவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்பிறகு, இணையவழியில் அந்தச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 

by hemavathi   on 07 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சீனப் பெருஞ்சுவரை  நடந்து கடக்க எவ்வளவு நாள்கள் ஆகும் தெரியுமா? சீனப் பெருஞ்சுவரை நடந்து கடக்க எவ்வளவு நாள்கள் ஆகும் தெரியுமா?
இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?
சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம் சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு
இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது
வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்! வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்!
மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம் மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.