LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    குழந்தை வளர்ப்பு - Bring up a Child Print Friendly and PDF

மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..

Mobile phone பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி?  உங்கள் குழந்தைகள் அதிகம் செல்போன், டிவி பார்ப்பதிலிருந்து எப்படி மடைமாற்றுகிறீர்கள்..? உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் என்று நம் வலைத்தமிழ் கதைசொல்லி குழுவின் அனைத்து பெற்றோர்களிடம் கேட்டிருந்தோம். .. நம் அனைத்து குழுவிலிருந்தும் வரும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை தொகுத்து இங்கே பதிவிடுகிறோம். இதில் இல்லாத வேறு உத்திகளை உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பயன்படுத்தினால் இந்தக் கட்டுரையின் கீழே பதிவிடுங்கள் .. அவை கட்டுரையில் சேர்க்கப்படும்.


* பெற்றோர்களுக்கு மொபைல் போன் கட்டுப்பாடு இல்லாதவரைக்கும் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது கடினம். பெற்றோர் மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம். 
கூடவே சேர்ந்து விளையாடலாம் , வெளியே அழைத்துச் செல்லலாம், கதைச் சொல்லலாம்.

* கண்டிப்பாக குறிப்பிட்ட நேர அளவு மட்டும் உபயோகிக்க செய்யலாம்.

* கைபேசியை குழந்தைகள் கண்ணில் படாதவாறு வைத்துவிட்டு புளுடூத் பயன்படுத்தலாம்.
கைபேசி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த காணொளியை காண்பிக்கலாம், எடுத்து சொல்லலாம். 

* உணவு உண்ணும்போது குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து உண்ணும்போது கைபேசி பாக்கும் தேவை குறையும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசாமல் அவர்களுக்கு கைபேசியை கொடுத்துவிட்டு பேச்சில் கவனம் செலுத்தும்போது தடுக்க முடியாமல் போகும் . 
காரில் பயணிக்கும்போது உங்கள் ஊரைப்பற்றி, உறவுகளைப் பற்றி, அவர்களுக்கு பிடித்த riddles ஆகியவற்றை சொல்லி கவனம் டிஜிடல் பக்கம் போகாமல் மடைமாற்றலாம். 
குழந்தைகளுக்கு  reading/ stem /craft ideas/ music/ drawing/ puzzle solving/giving situations or scenario for writing own story and making him/her to tell in Tamil... போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக தொடர்ந்து பழக்கப்படுத்த வேண்டும். இது எளிதல்ல, இருப்பினும் சில வாரங்கள்-மாதங்கள் தொடர்ந்து செய்யும்போது சாத்தியமே. 

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து , சமத்தாக இருக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் பரிசாக , வெகுமதியாக (Reward) எவ்வளவு நேரம் என்று சொல்லி ஒரு கட்டுப்பாட்டுடன் விளையாட சொல்லலாம். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் என்று (உதாரணமாக அரை மணி நேரம் ) ஒதுக்கி பழக்கப்படுத்தலாம் . 

அதிக தொந்தரவு இருக்கும்போது வெளியில் அழைத்து சென்று விளையாட வைக்கலாம் . 
வாரத்திற்கு ஒருநாள் ஒரு படம் (வெள்ளிக்கிழமை) , அவர்களுக்கு பிடித்த உணவு என்று திட்டமிடலாம் . 

by Swathi   on 22 May 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்! குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!
எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால்  முடியும் - ஜான் ஹோல்ட் எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்
பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்
சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி
குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன் குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்
குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன் குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன்
குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது? குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?
தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது
கருத்துகள்
22-May-2019 10:09:54 velliangiri said : Report Abuse
மிகவும் பயனுள்ள கருத்துக்கள், குழந்தைகள் செய்யும் பல தவறுகள் முதலில் நம்மிடம் இருந்துதான் பழகுகிறது என்பதை அழகாக சொல்லப்பட்டுள்ளது. வலைத்தமிழ் கருத்துக்களுக்கு நன்றிகள் பல.
 
18-May-2019 11:43:05 malathi said : Report Abuse
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து செல் போன் காணும் படி வைக்க கூடாது அது மட்டுமின்ட்ரி நம் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில் டாய் சோங்ஸ் மற்றும் எளிதில் புரிந்து கொள்ளகூடிய குட்டி கதைகள் அடங்கிய C டி போட்டு விடலாம் வீட்டுக்கு அருகில் இடம் அமைத்து பூ செடி மரம் வளர்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கலாம் அவர்கள் முன் நீங்களும் சிறு கதைதாள் படித்து மகிழலாம் மற்றும் குழங்கைகளுக்கு பிறரிடம் நீயும் செல் போன் உபயோகிப்பது நல்லதன்று என அறியுரைத்த செய்யலாம். குழந்களைகள் செய்யும் பல தவறுக்கு முழுக்க கரணம் நம் தான் எனவே மாற்றம் முதலில் நம்மிடம் வர வேண்டும் பிறகு தான் அதை நம் குழந்தைகளிடம் காண முடியும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.