LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1166 - கற்பியல்

Next Kural >

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். ('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான். அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காமத்தால் இன்பம் நுகர்ந்தவர் அதனால் வருந்துன்பத்தையும் பொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ் செய்யும்போது , அவ்வின்பம் கடல்போற் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - பின்பு அதுதானே பிரிவால் துன்பஞ் செய்யும்பொழுது , அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். காமத்தால் வரும் இன்பமுந் துன்பமும் அளவொத்திருப்பின் ஆற்றலாம் . துன்பம் இன்பத்தினும் மிகுத்திருப்பதால் ஆற்றுமாறில்லை யென்பதாம். 'மற்று' வினைமாற்று அல்லது பின்மைப் பொருளில் வந்த்து. 'அடுங்கால் ' என்று பின்றொடரில் வந்தமையால் , அதன் மறுதலை யெச்சம் முன்றொடர்க்கு வருவிக்கப்பட்டது.
கலைஞர் உரை:
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.
சாலமன் பாப்பையா உரை:
காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
Translation
A happy love 's sea of joy; but mightier sorrows roll From unpropitious love athwart the troubled soul.
Explanation
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.
Transliteration
Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal Thunpam Adhanir Peridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >