கண்ணன் ஆட்டம் என்றழைக்கப்படும் இக்கலை சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை உறியடி என்றே அழைக்கப்பட்டது. வெண்ணை திருடும் கண்ணனின் குறும்பையும், ஆட்டத்தையும் நடத்திக் காட்டுவதே உறியடி விழாவாகும். ஆனால் சாதாரண உறியடியிலிருந்து இந்நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டது. இக்கலை கிருஷ்ணன் கோவில்களில் மட்டுமல்லாமல் சிவன், அம்மன் கோவில்களிலும், சாஸ்தா, ஐயப்பன் கோவில்களிலும், நாட்டார் தெய்வக் கோவில்களிலும் திகழ்கிறது. இவ்வாட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் நிகழ்கிறது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்தான் இதனை நிகழ்த்த வேண்டும் என்ற நியதி இல்லை.
|