LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF

குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை செழியன்

குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை  செழியன்

கவனகக் கலை:

    ஒரே நேரத்தில் பல வகையான கேள்விகளை உள்வாங்கி நினைவில் வைத்து, மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு தனிமனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய ஒப்பற்றக் கலையாக கவனக கலைத் திகழ்கிறது. இதில் வெறும் நினைவாற்றல் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுவது கிடையாது. நினைவாற்றல் என்ற எல்லையைத் தாண்டி, படைப்பாற்றல், உணர்வாற்றல் போன்ற பன்முகம் கொண்ட கலை கவனகக் கலை ஆகும். சுருக்கமாகக் கூறினால் மனித ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய கலை ‘கவனகக் கலை’ ஆகும்.

அறிமுகம்:

    முனைவர். திரு. செழியன் அவர்கள் தன்னுடைய 13வது வயதிலிருந்தே கவனகக் கலையில் ஈடுபாடு உடையவராகக் காணப்பட்டார். எந்த ஒரு கலையையும் பயன் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. உளவியல் அடிப்படையில் மிகப்பெரிய மன எழுச்சியைத் தூண்டக் கூடிய கலை ‘கவனகக் கலை’ ஆகும். கவனகக் கலையின் அடிப்படை ‘நினைவாற்றல்’ ஆகும். நினைவாற்றல் கலையை மனிதன் பெருக்கிக் கொள்வதற்கும், தினந்தோறும் வாழ்க்கையில் அதைப் பயன்படுத்துவதற்கும் கவனகக் கலை மிகப்பெரிய அளவில் உதவும். கவனகக் கலை பயிற்சிகளை மேற்கொண்டால் மிகப்பெரிய வாழ்வியல் பயனை அளிக்கும். மற்றவர்களிடம் நம்மை வேறுபடுத்தக் கூடிய மிக எளிமையான, வலிமையான கலை ‘கவனகக் கலை’ ஆகும். அனைவரையும் ஈர்க்கக் கூடிய கலை ‘கவனகக் கலை’ ஆகும்.

மூளைக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன்:

    அடிப்படையில் நினைவாற்றல் என்பது மூளைக்குக் கொடுக்கும் பயிற்சியே ஆகும். அதிக சந்தோஷமோ, அதிக கோபமோ, அதிக படபடப்போ அடையும் போது மனிதனுக்கு மறதி ஏற்படும் என்பது உளவியல் ரீதியான உண்மை ஆகும். உடலும், மனமும் சேர்ந்து இயங்கக்கூடிய அளவுக்குப் பயிற்சியை நாம் எடுத்துக் கொண்டோமானால் நினைவாற்றல் சிறக்கும். ஆக்ஸிஜன் கிடைக்கும் போது மட்டும் தான் மூளை நன்கு செயல்படும். சாதாரணமாகவே மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 விழுக்காடு மூளை பயன்படுத்திக் கொள்கிறது. ஆக மூளைக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது.

பயிற்சி:

    ஓடிக் கொண்டிருக்கும் உலகில் நுரையீரல் நன்கு சுருங்கி விரியுமாறு யாரும் மூச்சு விடுவது கிடையாது. கண்ணை மூடிக் கொண்டு மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியிட வேண்டும். அப்படிச் செய்யும் போது எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறோம் என்பதையும் எண்ணிக் கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையான பயிற்சிதான். 40 நாட்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தால் நமக்கே ‘இது நாம் தானா’ என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு மாற்றம் ஏற்படும்.

    தினந்தோறும் 20 நிமிடம் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நேரம் இல்லாதவர்கள் 3 நிமிடம் வரை தங்கள் பயிற்சியை மேற்கொள்ளலாம். நமக்குப் பிடிக்காத வேலையைக் கூட ஆர்வத்துடன் செய்ய இந்த பயிற்சி உதவும். இந்த பயிற்சியை பெரும்பாலும் காலையில் செய்வது நல்லது. உணவு உண்ட பின் இந்த பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு உண்பதற்கு முன்னே இந்த பயிற்சியைச் செய்து முடித்து விட வேண்டும்.

நினைவாற்றலை ஊக்கப்படுத்தக் கூடிய உணவுகள்:

    வல்லாரை, வெண்டைக்காய், பசலைக் கீரை, தூதுவளை, தேங்காய் போன்றவை நினைவாற்றலை ஊக்கப்படுத்தும். உணவு முறைத் தாண்டி எளிய உடற்பயிற்சியும் நினைவாற்றலை அதிகப்படுத்தும். யோகாவில் சர்வாங்காசனம், தலைகீழ் இருக்கை, போன்றவை நினைவாற்றலை அதிகப்படுத்தக் கூடியவை. யோகா நன்கு தெரிந்தவர்கள் முன்னிலையிலே இந்த பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நினைவாற்றல் இல்லாத துறையும் இல்லை. நினைவாற்றல் தேவைப்படாத வயதும் இல்லை. எல்லா வயதினர்க்கும் அவரவர் வயதிற்கேற்ப கவனகக் கலை பயிற்சிகள் வேறுபடும்.

by Lakshmi G   on 04 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !! வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !!
ஜிம்பளா மேளம் ஜிம்பளா மேளம்
ஸ்பெஷல் நாடகம் ஸ்பெஷல் நாடகம்
வேதாள ஆட்டம் வேதாள ஆட்டம்
வைந்தானை ஆட்டம் வைந்தானை ஆட்டம்
வீரபத்ரசாமி ஆட்டம் வீரபத்ரசாமி ஆட்டம்
வாசாப்பு நாடகம் வாசாப்பு நாடகம்
வழியாட்டம் வழியாட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.