கட்டைக் குழல் எனும் காற்றிசைக்கருவி முக்கியமாகப் பயன்படுத்தப்படுவதால் கருவியின் பெயராலேயே இக்கலையும் அழைக்கப்படுகிறது. இதனை மேளம் என்று கூறுவதுண்டு. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை. ஆகிய மாவட்டங்களில் இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர். கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள் இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை நாயனத்தின் ஓசையைவிட உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர். இக்கலையின் நிலை தற்போது மதிப்பிழந்தே காணப்படுகிறது.
|