திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)
மணக்குடவர் உரை:
கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள். இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
இரா இந்நாள் நெடிய கழியும் - முன்பு நம் காதலரொடு கூடி யின்புற்ற நாட்களிலெல்லாம் குறிய வாயிருந்த இரவுகள், இன்று அவரினின்று பிரிந்து துன்புறுங் காலத்தில் மிக நீண்டு செல்கின்றனவா யுள்ளன ; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - ஆதலால், அக் கொடியார் கொடுமையினும் மிஞ்சிய கொடுமை செய்வனவாகும். தன் ஆற்றாமை கருதாது பிரிந்தமையின் ' கொடியார் ' என்றும், வரவு நீட்டித்தமையின் 'கொடுமை ' என்றும், தன் துன்பங்கண்டிரங்காமையானும் முன்னினும் நெடியவாய்க் கழிந்தமையானும் ' கொடுமையிற்றாங்கொடிய' என்றும், கூறினாள்.
கலைஞர் உரை:
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.
Translation
More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.
Explanation
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.