மனை விழைவார் மாண்பயன் எய்தார்- இன்பம் பற்றி மனைவியை அளவறிந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது-இனி இன்பத்திற்கும் அறத்திற்குமேதுவான பொருளீட்டுதலை விரும்பி மேற்கொள்வார்,அதற்குத் தடையென்று கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே. 'மனை' ஆகுபெயர்.' விழைதல்' ஆகுபெயர் போன்ற ஆகுவினை.'பயன்' என்றது அறப்பயனை இம்மைக்கேயுரிய பெண்ணின்பத்திலும் மும்மைக்கு முரிய அறப்பயன் சிறந்ததாதலின்,அதனை 'மாண்பயன்' என்றார். வினை யென்பது பாலாற் பொருளீட்டும் வினையைக் குறித்தது.முப்பொருள்களுள் ஏனையிரண்டும் பெறுதற்குக் கருவியாயிருக்கும் பொருட் பொருளை யீட்டுதற்குத் தடையாயிருத்தலின், மனைவி விருப்பப்படியொழுகுதல் கூடாதென்பதாம். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
கலைஞர் உரை:
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மனைவியின் காம் இன்பத்துக்காக அவளுடைய விருப்பத்தின்படி நடப்பவர்கள் வாழ்க்கையின் சிறந்த பயன்களை அடைய மாட்டார்கள். காரியத்தை விரும்புகிறவர்கள் விரும்பத் தகாத, நடத்தையும் அதுவேயாம்.
Translation
Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
Explanation
Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.