LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 884 - நட்பியல்

Next Kural >

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் -அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)
மணக்குடவர் உரை:
மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின் தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம். இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மனம் மாணா உட்பகை தோன்றின் - புறத்தில் திருந்தியதுபோல் தோன்றி அகத்தில் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின்; இனம்மாணா ஏதம் பலவும் தரும் - அது அவனுக்குச் சுற்றம் துணையாகாமைக் கேதுவாகிய பல குற்றத்தையும் உண்டுபண்ணும். 'இன மாணா ஏதம்' சுற்றத்தாரை உள்ளாக நின்று வேறுபடுத்தலும் அவர்வேறு படுதலும் அதனால் அவர்துணை இல்லாமற்போதலுமாம்.
கலைஞர் உரை:
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மனம் பொருந்தாததனால் உடனிருப்பவன் உட்பகை கொண்டுவிட்டாலும், அது தனக்குத் துணைப்பலம் குறைந்து போகும்படியான பல துன்பங்களையும் உண்டாக்கும்.
Translation
If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt.
Explanation
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations
Transliteration
Manamaanaa Utpakai Thondrin Inamaanaa Edham Palavum Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >