வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தின் மூலம் ரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா நடிகராக தமிழ் சினிமாவில் களம் இறங்கினார். இதனை தொடர்ந்து, தமிழ் படம், தில்லு முல்லு, கலகலப்பு ஆகிய படங்கள் அவரை சினிமாவில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
ஆனால் அதன் பின்னர் வந்த சில படங்கள் அவரது வெற்றிக்கு வேட்டு வைக்கும் விதத்தில் இருந்தது. இதனை அடுத்து வசனம் எழுதுவதில் கவனம் செலுத்திய சிவா, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார். இதில், அவருக்கு திருப்தி கொடுக்கவே, தொடர்ந்து சில படங்களுக்கு வசனம் எழுதி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது இயக்குனராகவும் மாற முடிவு செய்திருக்கிறார். இவர் இயக்குவதற்காக மூன்று கதைகளை அவரே உருவாக்கியுள்ளாராம். இதில், ‘காணாமல் போனவர் பற்றி அறிவிப்பு’ என்ற கதையை அவரே இயக்கி, நடிக்கவும் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவா தற்போது ‘144’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்தபிறகு, தனது புதிய படத்தை இயக்கத் தொடங்குவார் என தெரிகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|