LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1215 - கற்பியல்

Next Kural >

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.(இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
நனவினாற் கண்டதும் ஆங்கே (இனிது) - முன்பு நனவின்கண் காதலரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதே இனிதாயிருந்தது; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அக்கண்ட பொழுதே இனிதாயிருந்தது. ஆதலால் இரண்டும் எனக்கு ஒத்தனவே. முன்னும் யான் பெற்ற இன்பம் இவ்வளவே. அதை இன்னும் இங்ஙனமே பெற்று ஆற்றுவேன் என்பதாம். 'கண்டதூஉம்' இன்னிசையளபெடை. ஏகாரங்கள் பிரிநிலை. 'கனவு' ஆகுபொருளி. 'இனிது' முன்னுங் கூட்டப்பட்டது. மூன்றாம் வேற்றுமை ஆனுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் மயங்கிற்று.
கலைஞர் உரை:
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கனவில் அனுபவித்த கலவி யின்பம் கனவு காணும் சிறிது நேரத்துக்குத்தான் என்றால், நனவில் அனுபவிக்கிற கலவி யின்பமும் கலவி செய்கிற சிறிது நேரத்துக்கு மட்டுந்தானே ? என்ன வித்தியாசம் ?
Translation
As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greet.
Explanation
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
Transliteration
Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan Kanta Pozhudhe Inidhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >