41 நாட்கள் விரதமிருந்து அம்மனைக் குறித்து பாடல்கள் பாடினால் தோஷங்கள் விலகும் என்று உள்ளது இங்குள்ள சிறப்பு. கோயிலின் வெளிப்புறத்தில்
அரசமரம், செண்பகமரம் மற்றும் செடி கொடிகள் நிற்கின்றன. இதை சர்ப்பக்காவு என்கின்றனர். இங்கு ஆறு அடி உயர பாம்பு சிலை உள்ளது. இதை
நாகராஜா என்கின்றனர். இந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியமும்
கிடைக்கிறது. ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம் பெறலாம். அம்பாள் சந்நிதியில் உள்ள
யோகீஸ்வரரை வணங்கி, அங்கு வழங்கப்படும் விபூதியை தரிசித்துக் கொண்டால் பால பீடைகள் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்
விலகுமென்ற நம்பிக்கை உள்ளது. தேவிக்கு வஸ்திரம், அரளிப்பூ சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர்.இக்கோயிலில் மாசி மாத மிருகசீரிட
நட்சத்திரத்தன்று துவங்கும் திருவிழா விசேஷம். துவக்கநாளில், குரல்வளமுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் தோற்றப்பாட்டு என்னும் மலையாள கீதம்
இசைக்கின்றனர்.
41 நாட்கள் விரதமிருந்து அம்மனைக் குறித்து பாடல்கள் பாடினால் தோஷங்கள் விலகும் என்று உள்ளது இங்குள்ள சிறப்பு. கோயிலின் வெளிப்புறத்தில் அரசமரம், செண்பகமரம் மற்றும் செடி கொடிகள் நிற்கின்றன. இதை சர்ப்பக்காவு என்கின்றனர். இங்கு ஆறு அடி உயர பாம்பு சிலை உள்ளது. இதை நாகராஜா என்கின்றனர். இந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது.
ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம் பெறலாம். அம்பாள் சந்நிதியில் உள்ள யோகீஸ்வரரை வணங்கி, அங்கு வழங்கப்படும் விபூதியை தரிசித்துக் கொண்டால் பால பீடைகள் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுமென்ற நம்பிக்கை உள்ளது. தேவிக்கு வஸ்திரம், அரளிப்பூ சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் மாசி மாத மிருகசீரிட நட்சத்திரத்தன்று துவங்கும் திருவிழா விசேஷம். துவக்கநாளில், குரல்வளமுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் தோற்றப்பாட்டு என்னும் மலையாள கீதம் இசைக்கின்றனர். |