இங்கு சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி
மற்றும் பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின்போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண
வைபவம் நடைபெறும். அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது
பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி
செழிக்கும் என்பது ஐதீகம். இங்கு ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி, துர்கை, சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இங்கு சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி மற்றும் பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின்போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும், சந்ததி செழிக்கும் என்பது ஐதீகம். இங்கு ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி, துர்கை, சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். |