ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால்.
இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்;
அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக
இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நம்முடைய உருவத்தைத் திருப்பி எதிர் உருவாக நிழல் காட்டக்கூடிய தண்ணீர்தான் நல்ல தண்ணீர். அதைப்போல ஒருவருக்கொருவர் ஒத்த எதிர் விருப்பம் காட்டக்கூடிய காதலன் காதலியாகிய இருவருக்கிடையில்தான் நல்ல காம இன்பம் இருக்கும்.
Translation
Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love
Explanation
Like water in the shade, dislike is delicious only in those who love