LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தின் சர்வே எண், பட்டாவை அறிய வருவாய்த்துறை உருவாக்கிய புதிய செயலி

 

சென்னை:நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, அலைப்பேசி வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய்த் துறை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் நேரடியாகப் பார்க்கும் ஒரு நிலத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்களைச் சரியாகக் கூறுவது எளிதல்ல. வருவாய்த் துறையின் ஆவணங்களை கையில் வைத்து இருந்தாலும், அதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் இது தானா என்பதை, தெளிவாகக் கூறமுடியாது. தற்போது, 'ஸ்மார்ட் அலைபேசிகளில்  உள்ள ஜி.பி.எஸ்., புவியிடத் தகவல் தொகுப்பு வசதியை, மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.

உணவு உள்ளிட்ட பொருட்களை, 'விநியோகம்' செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட நபரின் வீட்டை அடையாளம் காண்பதற்கும், இந்த வசதியை மக்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது, யார் எந்த இடத்தில் இருந்தாலும், அலைப்பேசியில், 'இருப்பிடம்' பகிர்வதன் வாயிலாக, சரியான இருப்பிடத்தை அறிய முடிகிறது. இதை அடிப்படையாக வைத்து, நிலத்தின் விபரங்களை மக்கள் அறிய, புதிய வசதியை வருவாய்த் துறை உருவாக்கி வருகிறது.
பொதுமக்கள் தங்கள் அலைப்பேசியில், 'Tamilnilam Gioinfo' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றனரோ, அந்த இடத்தின், 'கூகுள்' வரைபடத்துடன், சர்வே எண் விபரங்கள் திரையில் வந்து விடும்.

இதில், திரையைத் தேவைக்கு ஏற்ப பெரிதாக்கிப் பார்த்தால், தங்களுக்குத் தேவையான நிலத்தின் சர்வே எண் விபரங்களைத் துல்லியமாக அறியலாம். தற்போதைய நிலவரப்படி, பிரதான சர்வே எண்களை, இதில் அறிய முடியும். 

இதில், நீங்கள் ஏதாவது ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, அதன், 'அ' பதிவேடு, நில அளவை வரைபடம், பட்டா விபரம் போன்றவற்றை அறியும் வசதியும் இதில் உள்ளது.  தொழில்நுட்ப ரீதியாக அனைத்துப் பணிகளும் முடியும் போது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும், பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தலாம்.

அடுத்த சில மாதங்களில், இந்தச் செயலி முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதை மக்கள் பயன்படுத்தத் துவங்கி விட்டால், வீடு, மனை வாங்கும்போது, ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களை, மக்களே எளிதாகச் சரிபார்க்க வாய்ப்பு ஏற்படும்.

 

 

by hemavathi   on 21 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?
சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம் சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு
இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது
வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்! வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்!
மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம் மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்
அயலகத் தமிழர் நல வாரியத்தில் இணைவது எப்படி? அயலகத் தமிழர் நல வாரியத்தில் இணைவது எப்படி?
முதல் தலைமுறைச் சான்றிதழ் பெறுவது எப்படி? முதல் தலைமுறைச் சான்றிதழ் பெறுவது எப்படி?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.