LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

நம் இந்திய தேசத்தை உலகில் தலைசிறந்த தேசமாக்குவோம்!

கட்சி,ஜாதி,மதம்,மொழி என பேசி நம் இந்திய தேசத்தின் மக்கள் சமுதாயத்தை பிளவு படுத்துவதை கண்டு மனம் வேதனையடைகிறது.அண்ணல் மகாத்மா தூய்மையான அரசியல் நெறிகளை பின்பற்ற சொன்னார். வ.ஊ. சிதம்பரனார் "சுதேசி கொள்கை" முழக்கமிட்டு சுதேசி கப்பல் ஒட்டி சொத்து சுகங்களை இழந்து சிறையில் வாடினார். இன்று 66 ஆண்டு கால சுதந்திரத்தில் நாம் கண்டது என்ன?


1951 ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 50 மில்லியன் டன்கள், மக்கள் தொகை 33 கோடி. தற்போது மக்கள் தொகை 120 கோடி-உணவு தானிய உற்பத்தி சுமார் 245 மில்லியன் டன்கள். நாட்டின் உணவு உற்பத்தி 5 மடங்கு பெருக்கிய விவசாயிகள் சுமார் 2 லட்சம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அவல நிலைக்கு உண்மை  காரணம் நாட்டின் வேளாண் கொள்கைகள் உற்பத்தியை மையமாக வைத்து வகுக்க பட்டன. உற்பத்தி மற்றும் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நலன்கள் சமமாக முக்கியப்படுத்த படவில்லை. இந்த தவறான வேளான் கொள்கைகள் திருத்த இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை. மக்களின் அடிப்படை தேவையான குடிக்கிற தண்ணீரும், படிக்கிற கல்வியும் மருத்துவமும் முழுதாக வியாபாரமான அவலம். கிராமங்கள் தேய்ந்து நகரங்கள் வீங்கி நாற்றம்  எடுத்துள்ள பரிதாபம். தங்களின் லஞ்ச ஊழல்களை மக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க இலவச திட்டங்கள். இளைய தலைமுறையை குடிகாரர்கள் ஆக்கிவரும் கொடுமை. புதிய பொருளாதாரம் என்ற பெயரால் "சுதேசிகொள்கைகள்" குழி தோண்டி புதைக்கப்பட்டு நம் இந்திய தேசம் துறை வாரியாக பன்னாட்டு நிறுவனங்களிடம் ஏலம் விடப்படும் இழி நிலை. மேற்கண்டவைகள் தான் நம் தேசத்தின் உண்மை நிலை. இவைகளை மாற்ற வேண்டாமா? இன்றைய தேவை "உண்மையான தேசப்பற்று". நம் இளைய தலைமுறை இதை உணரவேண்டும். நாம் உணர்த்த வேண்டும். இந்த புத்தாண்டில் புது உறுதி ஏற்ப்போம்! கடினமாக உழைப்போம்! நேர்மையாக வாழ்வோம்! நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் அடிப்படை தேவைகள் வணிக நோக்கமின்றி அரசுகள் நிறைவேற்ற பாடுபடுவோம்  சுதேசியை காப்போம்! நதி நீர் வளங்கள் தேசிய சொத்து ஆக்கபட்டு பற்றாக்குறை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.வளமான கிராமங்களால் தான் இந்திய தேசம் வலிமை  பெறும். அரசுகளின் தவறான கொள்கைகள் மாற மாற்ற உறுதி கொள்வோம்! நம் இந்திய தேசத்தை உலகில் தலைசிறந்த தேசமாக்குவோம்! வல்லரசாவதைக் காட்டிலும் தன்னிறைவு பெற்ற நல்லரசாக உறுதி ஏற்போம். 

ஆறுபாதி கல்யாணம்,பொதுச் செயலாளர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பு 

விவசாயியை காப்பாற்று
by Swathi   on 25 Jan 2014  1 Comments
Tags: Agriculture   Farmers   Arupathy Kalyanam   New year           
 தொடர்புடையவை-Related Articles
விவசாயம் பேசுவோம் -2 : திரு.குருசாமி (Let's Talk Agriculture - D.Gurusamy) விவசாயம் பேசுவோம் -2 : திரு.குருசாமி (Let's Talk Agriculture - D.Gurusamy)
விவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு  (Let's Talk Agriculture - 11) விவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு (Let's Talk Agriculture - 11)
விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு  (Let's Talk Agriculture - Senthilkumar Babu) விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு (Let's Talk Agriculture - Senthilkumar Babu)
விவசாயம் பேசுவோம் - 9 : திருமதி. ஸ்ரீ பிரியா வரதீஷ்  (Let's Talk Agriculture - Sri Priya Vardheesh) விவசாயம் பேசுவோம் - 9 : திருமதி. ஸ்ரீ பிரியா வரதீஷ் (Let's Talk Agriculture - Sri Priya Vardheesh)
விவசாயம் பேசுவோம் - 6 : திரு.காளி (Let's Talk Agriculture - Thiru.Kaali) விவசாயம் பேசுவோம் - 6 : திரு.காளி (Let's Talk Agriculture - Thiru.Kaali)
விவசாயம் பேசுவோம் - 5 : திரு.கே.சண்முகம் (Let's Talk Agriculture - K.Shanmugam) விவசாயம் பேசுவோம் - 5 : திரு.கே.சண்முகம் (Let's Talk Agriculture - K.Shanmugam)
விவசாயம் பேசுவோம் -4 : திரு.சாவித்திரி  கண்ணன் (Let's Talk Agriculture - Thiru.Savithri Kannan) விவசாயம் பேசுவோம் -4 : திரு.சாவித்திரி கண்ணன் (Let's Talk Agriculture - Thiru.Savithri Kannan)
2016-ம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் 2016-ம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு விருதுகள்
கருத்துகள்
02-Feb-2016 10:38:46 இர்ஷாத் அஹ்மத் said : Report Abuse
சார், எங்கு நம் நாடு பற்றி 3ம் கிளாஸ் ஸ்டுடென்ட் கு எச்சி வண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.