(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?
ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய வுப்பு- இதுபோது இவள் நெற்றி வெயர்க்குமளவு செய்த கலவி்யின்கண் உள்ள இனிமையை ; ஊடிப்பெருகுவமோ -இன்னுமொருகால் இவள் ஊடி யாம் பெறவொண்ணுமோ!
இனிமை ஒருங்கே நுகரும் ஐம்புலவின்பம். இனி அவ்வப்போது அரிதென்று பெற்றதன் சிறப்புக் கூறியவாறு. நுதல் வெயர்ப்பச் செய்தது ஒரு சிறந்த கலவிவகை யெனினுமாம். 'கொல்' அசைநிலை 'ஓ' ஐயவினா , 'இவளூடி' என்பது தனிநிலை யமைப்பு.
கலைஞர் உரை:
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.
சாலமன் பாப்பையா உரை:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
முன் புணர்ந்ததனால் உடல் வேர்க்கும்படி உண்டான அலுப்புத் தீருவதும் வெளியாகிக் குறைந்துவிட்ட சீவ சத்தான இந்திரியம் ஊறுவதும் பிரிந்திருப்பதனால்தான் பெற முடியும்.
Translation
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.
Explanation
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.