ஒயில் கும்மி என்பது குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டமாகும் .இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை.நாட்டுக் கொட்டு ஆட்டம் என்றும் இக்கலை அழைக்கப்படுகிறது. இவ்வாட்டத்திற்கென தனியாக பயிற்சி எதுவும் இல்லை.இக்கலையில் பானைத்தாளம், தோற்பானைத்தாளம் , சிங்கி ஆகிய இசைகருவிகளுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர் . இந்நிகழ்ச்சியில் இடையர் , கள்ளர் போன்ற இடைநிலைச் சாதியினரே பங்கேற்கின்றனர் .வேளாண் தொழிலில் செழிப்பு வேண்டியும் , வெப்ப நோய் குறைய வேண்டியும் மழையை எதிர்நோக்கியும் ஒயில் கும்மி நிகழ்த்தப்படுகிறது
|