காமெடி நடிகர்கள் பாப்புலர் ஆகும் போது, தனக்கென ஒரு காமெடி பட்டாளத்தை உருவாக்கி, அதன் மூலம் காமெடி சீன்களை உருவாக்கி நடிக்கிற வழக்கம். இந்த வழக்கம் கவுண்டமணி-செந்தில் காலத்திலேயே வந்து விட்டது. அதற்கு பிறகு வடிவேலு, விவேக், சந்தானம், கஞ்ச கருப்பு ஆகியோரும் தங்களுக்கென்ற காமெடி டீம் வைத்திருந்தார்கள்.
இப்போது இந்த வரிசையில் பரோட்டா சூரியும் சேர்ந்து விட்டார். தனக்கு காமெடி காட்சிகளை எழுத ஒரு டீம் அமைத்து அவர்களுக்கு ஆபீசும் போட்டுக் கொடுத்திருக்கிறார். படத்தின் கதையை இயக்குனார் சொன்னதும். அந்த கதைக்கு ஏற்றமாதிரி அண்ணன் என்னென்ன காமெடி பண்ணலாம் என்று அண்ணனின் விழுதுகள் இரவு பகலாக யோசிச்சிசு சீன் பிடிக்கிறாங்க.
இது குறித்து பரோட்டா சூரி பேசும் போது, இதுவரைக்கும் என்னோட காமெடி சீனை நானேதான் யோசிச்சிக்கிட்டிருந்தேன். இப்போ நிறைய படங்கள்ல நடிக்கிறதால தனியா உட்கார்ந்து யோசிக்க முடியல. அதனாலதான் புதுசா ஆபீஸ் போட்டு ஒரு டீமையும் உருவாக்கிட்டேன். ஜனங்க சிரிக்கிற மாதிரி சீன் பிடிங்கன்னு சொல்லியிருக்கேன் என வெள்ளந்தியாக சொல்கிறார் சூரி.
|