|
|||||
மீடியா மற்றும் ரசிகர்களின் பாராட்டால் என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆனது - பார்த்திபன் !! |
|||||
நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம். இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடை பெற்றது. இதில், படத்தின் இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது, இந்த படத்தை முதல் நாள் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய போது என்னையுமறியாமல் என் கண்கள் கலங்கியது. அதன்பிறகு பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்தபோது, அதிக உணர்ச்சிவசப்பட்டதால் என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. காரணம் நான் மீடியாக்களை அதிகமாக நேகிக்கிறேன். அதன் பிரதிபலிப்புதான் என்னால் பேச முடியவில்லை. என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆகிவிட்டது என உணர்ச்சி கரமாக பேசிய பார்த்திபன். நான் ஜாலியாக இருப்பது போல் தெரியும். ஆனால் நான் அப்படி இருப்பதில்லை. சினிமா என்கிற தொழிலைப்பற்றி யோசிக்கும்போது எப்போதுமே நான் சீரியசாகவே இருக்கிறேன். அந்த தொழிலை விளையாட்டுத்தனமாக இல்லாமல் சீரியசாக செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். அந்த சீரியசான உழைப்புக்கு கிடைத்ததுதான் இந்த வெற்றி. ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் துக்கமும் வந்துள்ளது. இப்படம் தற்போது திருட்டு வி.சி.டி.யில் வெளியாகியுள்ளது. திருட்டி வி.சி.டி. என்பது தற்போது பரவி வரும் எபோலா நோய் போல் ஆகிவிட்டது. இந்நோய்க்கு மருந்து இல்லாதது போல் திருட்டி வி.சி.டி.யும் ஒழிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. ஆனால் நான் அதை விடமாட்டேன். நாளை முதல் நானே நேரடியாக களத்தில் இறங்குகிறேன். திருட்டி வி.சி.டி. தயாரிப்பவர்களை போலீஸ் துணையோடு பிடிக்க போகிறேன். இப்படம் எப்படி திருட்டு வி.சி.டி.யில் வந்தது என்று கண்டறிய ஒரு தனி குழுவை உருவாக்கியிருக்கிறேன். இதில் ஒரு தியேட்டர் சம்பந்தப்பட்டுள்ளது. அந்த தியேட்டரின் அனுமதியோடு திருட்டு வி.சி.டி.கள் உருவாகின்றன. அதைக் கண்டறிந்து அந்த தியேட்டரை தடை செய்ய வலியுறுத்துவேன்” என்று பரபரப்பாக பேசினார் பார்த்திபன். |
|||||
by Swathi on 21 Aug 2014 0 Comments | |||||
Tags: Parthiban Kathai Thiraikathai Vasanam Iyakkam | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|