இழவு ஊழ் (உற்றக்கடை) பேதைப்படுக்கும் -ஒருவன் தன்செல்வத்தை இழத்தற்குக்கரணகமான தீயூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப்பேரறிஞனாயிருந்தாலும் அவனைப் பேதையாக்கும்; ஆகல்ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும்-இதற்கு மாறாக, அவனுக்குச் செல்வஞ் சேர்வதற்கேற்ற நல்லூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப் பேதையாயிருந்தாலும் அவனைப் பேரறிஞனாக்கும்.
செல்வம் என்பது அதிகாரத்தால் வந்தது. 'இழவூழ்', 'ஆகலூழ்' என்பன 4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. உற்றக்கடை என்பது இறுதிநிலை விளக்கணி. மேற்கூறிய முயற்சிக்கும் சோம்பற்கும் ஏதுவான நிலைமைகள் இங்குக் கூறப்பட்டன.
கலைஞர் உரை:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம்
தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கைப்பொருளை இழக்கவேண்டிய தீவினைப் பயன்கள் வரும்போது உள்ள அறிவையும் கெடுத்துவிடும்; நல்வினைப் பயன் வரும்போது புதுப்புது யோசனைகளைக் கொடுத்து அறிவை அதிகப்படுத்தும்.
Translation
The fate that loss ordains makes wise men's wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless.
Explanation
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.