LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிரபஞ்சத்தின் வேதம் திருக்குறள் : நரேந்திர மோடி புகழாரம் !

திருவள்ளுவர் தினத்தையொட்டி கடந்த ஜனவரி 16ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருக்குறள், சாதாரணமானது அல்ல; இந்த பிரபஞ்சத்துக்கான வேதம். எளிமையான வரிகளில் ஏராளமான அர்த்தங்களை கொண்டது.

மனிதநேயத்தை வலியுறுத்தும் முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எப்போதோ எழுதப்பட்ட இந்த திருக்குறள், இப்போதைய காலத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது. திருக்குறள், எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையோ, தலைவரையோ, மொழியையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடவில்லை. அனைத்து நாடுகளுக்கும், அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமானதாக உள்ளது.

இதனால் தான், திருக்குறளை பிரபஞ்ச வேதம் என்கிறேன். திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு, அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய மனிதவள அமைச்சகம், திருக்குறளை இதுவரை மொழி பெயர்க்கப்படாத இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருக்குறளை, குஜராத்தில் பிறந்த பி.சி.கோகிலா என்ற பேராசிரியை, குஜராத்தியில் மொழி பெயர்த்து உள்ளார். இவர், தமிழகத்தை சேர்ந்தவர்.

பாரத பிரதமர் திருக்குறளுக்கு புகழாரம் சூட்டுவதை வரவேற்கும் இந்த வேளையில், தமிழ்மொழிக்கு உரிய ஆட்சி மொழி தகுதியை இந்திய அரசு வழங்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

by Swathi   on 19 Jan 2015  0 Comments
Tags: Thirukkural   திருக்குறள்   Narendra Modi   வேதம்           
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.