LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அரசுப் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பேசினார்.

”காமராஜர் ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். நாட்டின் அனைத்துத் தலைவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார்.
காமராஜர் வழியில் புதுச்சேரியில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. எத்தனையோ திட்டங்களைப் பிள்ளைகளுக்கு அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பல சலுகைகளை வழங்குகிறது. கல்விக்காக அரசானது ஆண்டுக்கு ரூ.1,350 கோடியை ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்காக ரூ.950 கோடியைச் செலவிடுகிறது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுப் படித்து வருகின்றனர். பிற படிப்புகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது இந்தக் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும். எல்லோரும் படிக்க வேண்டும். அதற்கு அடிப்படை கல்வி. அந்தக் கல்வியைக் கொடுப்பது அரசின் கடமை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், உலகம் முழுவதும் செல்ல வேண்டும்.

நல்ல நூல்களைப் படித்தால் நல்ல சிந்தனையாளராக வர முடியும். அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவ முடியும். எனவே பிள்ளைகள் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாகப் படித்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்று முதல்வர் ரங்கசாமி பேசினார். 

 

 

by hemavathi   on 15 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது
5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி  வழங்கும் மத்திய அரசு 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி வழங்கும் மத்திய அரசு
தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை -  மத்தியக் கல்வி அமைச்சகம் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை - மத்தியக் கல்வி அமைச்சகம்
ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம் ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்! அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.