LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.

கடந்தகாலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்த பெருந்தொற்று நோய்களான, டெங்கு, சிக்குங்குனியா மற்றும் கோரோனாவின் முதல் அலையின்போது சித்தமருத்துவம் பெரும்பங்கு வகித்தது நாம் அனைவரும் அறிந்ததே. . இதன் அடிப்படையில், கோரோனா இராண்டாம் தொற்றின்போதும், சித்தமருத்துவம் மக்களுக்கு பயன்படவேண்டும் என்ற அடிப்படையில் அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.

வலைத்தமிழ் ஒருங்கிணைப்பில் சித்தமருத்துவர்கள் இணைந்து, “மக்களைக் காக்கும் சித்தமருத்துவம்” என்ற தொடர் நிகழ்ச்சியை கடந்த ஓராண்டாக நடத்திவருகிறார்கள். அதில், பிரபல சித்தமருத்துவ ஆளுமைகளை அழைத்து, எப்படி சித்தமருத்துவத்தை மக்கள் பயன்பாட்டுக்கு  மேலும் எடுத்துச் செல்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தொடரில் 24-வது  நிகழ்வாக தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் இக்கட்டான கொரோனா சூழலை கருத்தில் கொண்டு   மாவட்ட அளவில் உள்ள சித்த மருத்துவர்கள் அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து தன்னார்வலர்களாக, காணொளி வழியாக (Tele Medicine )  ஆயுஷ் அமைச்சகமும், தமிழ்நாடு அரசும் வகுத்துள்ள வழிகாட்டலின்படி ஆரம்பகட்ட நிலையில் உள்ள மக்களுக்கு உதவ நம்முன் உள்ள வாய்ப்புகளைக் குறித்து கலந்துரையாட வரும்படி தனியார் சித்தமருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதில் இதுவரை 185 மருத்துவர்கள் பதிவுசெய்திருந்தார்கள்

இந்நிலையில்,  நேற்று 13 மே 2021 ல் இரவு 9 மணிக்கு , அனைவரையும் அழைத்து ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 38 மாவட்டங்களிலிருந்து பதிவுசெய்த  சித்தமருத்துவர்கள் கலந்துகொண்டு, இன்று நாம் சந்திக்கும் சவால்கள், அவர்களின் கள  அனுபவங்கள்,  இதற்கு நாம் எப்படி அரசுடன் கைகோர்த்து மக்களைக்காக்கும் பணியில் துணைநிற்பது என்று விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மருத்துவர்கள் தன்னார்வலர்களாக இணைந்து கோரோனாவிலிருந்து மக்களைக் காக்க அரசுக்கு ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெலிமெடிசின் என்று சொல்லப்படும் முறையில் அனைத்து சித்த மருத்துவர்களும், அவரவர் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்தவாறே மக்களுக்கு பணி செய்யும் உத்தியை செய்ய முன்வந்துள்ளனர். கொரோனா குறித்த சந்தேகங்கள், வருமுன் காப்பது, குறிகுணம் இல்லாத கோவிட், குறைந்த குறிகுணம் உடைய கோவிட், மிதமான குறிகுணம் உள்ள கோவிட், கோவிட் குணமான பின் மருத்துவ முறை, வீட்டில் இருந்தே ஹோம் குவாரன்டைன் முறையில் நோயாளி தன்னை பராமரிப்பது, எந்த நிலையில் மருத்துவமனை செல்வது, உணவுப்  பழக்கம், என அனைத்தையும் அரசின் வழிகாட்டுதல்களின் பேரில் மக்களுக்கு தொலைபேசி/வீடியோ வழியாக தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், மருத்துவ மனைகளில் குவியும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியும். தேவையான நோயாளிகள் மட்டுமே மருத்துவமனை செல்லும் போது, மருத்துவ பணியாளர்களுக்கும் பணிச்சுமை குறையும். தேவையான நோயாளிகளிக்கு படுக்கையும் தயாராக இருக்கும். இத்திட்டம், தமிழக அரசுக்கு பக்க பலமாக இருக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது.

தேசீய சித்த மருத்துவ இயக்குநர்  டாக்டர்.மீனாகுமாரி அவர்கள் இந்த தன்னார்வக்குழுவின் முயற்சியைப் பாராட்டி, இது அவசியமான சேவை என்று குறிப்பிட்டு இதற்கு பக்கபலமாக இருப்பதாக  உறுதியளித்தார்.  இக்கூட்டத்தில் பேசிய இயக்குநர்  அவர்கள் , இந்த டெலிமெடிசின் திட்டத்தில்  ஈடுபடும் சித்த மருத்துவர்களுக்கு உரிய பயிற்சிறையும், அரசின் வழிகாட்டுதல்களையும் தனது குழு வழங்கும் என்று தெரிவித்தார். தேசீய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியர் டாக்டர்.கிறிஸ்டியன் பேசுகையில்  ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் நவீன மருத்துவத்துடன் சித்த மருந்துகளையும் இணைத்து செய்யும் போது, வேகமாக முன்னேற்றம் கிடைக்கிறது என்றும், இறப்பு விகிதம் வெகுவாக குறைகிறது என்றும் தெரிவித்தார். மணிப்பால் பல்கலைகழகத்தின்  சித்த மருத்துவப்  பிரிவின் ஆராய்ச்சியாளர் டாக்டர். அருள் அமுதன் அவர்கள், இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று விவரித்தார். மாவட்டம் தோறும் 20 சித்த மருத்துவர்கள் தன்னார்வலர்களாக செயல்பட்டால், ஒருவர் தினமும் 10 நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினால், தினமும் 200 நோயாளிள் வீதம், ஒரு மாதத்தில் 6000 நோயாளிகள் ஒரு மாவட்டத்தில் பயன்பெறுவர். இப்படி 38 மாவட்டங்களிலும் சேர்த்து வெகுவாக பயன்பெறுவர் என்று குறிப்பிட்டார். நோயாளிகளை நோய் தீரும்வரை தொடர்ந்து கண்காணித்து வருதல் மற்றும் அவர்களின் தகவல்கள் ஆராய்ச்சிக்காக அரசிடம்  ஒப்படைத்தல் என இந்த திட்டத்தை ஆராய்ச்சிப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

வேலுமயில் சித்தா மருத்துவகல்லூரி பேராசிரியர் டாக்டர்.செந்தில் குமார் அவர்கள், அனைத்து மக்களுக்கும் தேவையான சித்தா மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்கள் கிடைக்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். சாய்ராம் சித்தா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.அனிதா அவர்கள்,  MBBS படித்த சித்த மருத்துவர்கள் மற்றும் சித்தமருத்துவம் மீது நம்பிக்கை உள்ள நவீன மருத்துவர்களையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிட்சை முறைக்கான அடித்தளத்தை இந்த திட்டத்திலேயே செயல்படுத்தும் சாத்திய கூறுகளை தெரிவித்தார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர். கீதசுதீர் அவர்கள் இரண்டாம் கோவிட் அலையில், முதல் அலையை விடவும் வீரியம் மிகுந்த சித்த மருந்துகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவரின் அனுபவந்த்தையும் பகிர்ந்தார். ஆட்டிசம் சிறப்பு மருத்துவரும் சுவாபிமான் நிறுவனருமான டாக்டர் பார்த்தீபன் அவர்கள், நவீன நோய்கணிப்பு முறைகளின் அடிப்படையில் சித்த மருந்துகளை பரிகரிக்கவும், துணை நோய்களை உடையவர்களுக்கு சிறப்பு சித்தா சிகிட்சைகளை செய்யவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யுமாறும் வலியுறுத்தினார்.  மருத்துவர் கார்த்திகேயன் இக்குழுவுடன் ஆங்கில மருத்துவர்களையும் இணைத்து செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.  மருத்துவர்.சிவஞானம் இன்றிய ஆக்சிஜன் குறித்தான தேவையை குறிப்பிட்டு பேசினார்.

ஆயுஷ்பதி சங்கத்தின் தலைவர் டாக்டர்.அலெக்ஸ், இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செய்ய அனைத்து சித்த மருத்துவர்களும் இணைந்து மாவட்ட அளவில் அரசுடன் கைகோர்த்து செயல்படுவதன் அவசியத்தையும், இந்த திட்டத்தின் மூலம் மக்கள அடையபோகும் நன்மையை முன்னிறுத்தி செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில், மருந்துகள் குழு, தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு ,  அரசின் புதிய வழிகாட்டுதல்கள் குழு, மருத்துவர்களின் பயிற்சி குழு, திட்ட ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைந்த மருத்துவர் குழு, அவசர மருத்துவர்கள் குழு, இணைய குழு,  என பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். அனைத்து குழுவும் அரசின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த பணியை செய்து முடிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப் பட்டது,

மேலும் அனைத்து சித்த மருத்துவர்களின் பல்வேறு கருத்துக்களும் பகிரப்பட்டு, குறிப்பு எடுக்கப்பட்டது. விரைவில் இந்த குழு தன் பணியை செவ்வனே தொடங்கி, தமிழகத்தில் கோரோனாவை ஒழிக்க அரசுடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. தமிழக அரசின் கோரோனா வாடிக்கையாளர் சேவை  எண்ணான 104 உடன் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள அனைவரது விவரங்களுடன் அரசுக்கு தெரிவித்து உரிய வழிகாட்டலைப் பெற்று இதை உடன் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிமேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு, மருத்துவர்களுக்கான பயிற்சி , ஒருங்கிணைந்த  இணையதளம், வாட்ஸப்  உதவி எண் , மாவட்ட அளவில் இதில் இணைந்து கைகொடுக்க விரும்பும் தன்னார்வ அமைப்புகளை  அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல கோணங்களில் தன்னார்வக் குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

தொடர்புக்கு : மக்களைக்காக்கும் சித்த மருத்துவக்குழு , siddha4covid@gmail.com

மருத்துவர்.அருள் அமுதன், MD (சித்தா), M.Sc(Medical Pharmacology), P.hd. 

மருத்துவர். செந்தில்குமார் , MD (சித்தா)

மருத்துவர்.அனிதா , MD (சித்தா), PGDY

by Swathi   on 15 May 2021  0 Comments
Tags: Siddha   சித்தமருத்துவம்                 
 தொடர்புடையவை-Related Articles
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies
மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்... மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...
சித்த மருத்துவ முப்பெரு விழா சித்த மருத்துவ முப்பெரு விழா
நலம் காக்கும் சித்தமருத்துவம் - பகுதி 1 நலம் காக்கும் சித்தமருத்துவம் - பகுதி 1
நலம் காக்கும் சித்த மருத்துவம் - தொடர் அறிமுகம் நலம் காக்கும் சித்த மருத்துவம் - தொடர் அறிமுகம்
சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு !! சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.