LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜோதிடம்

இறைவனின் சந்நிதியில் விளக்கேற்றுவதன் பயன்கள்

இறைவனின் சந்நிதியில் விளக்கேற்றுவதன் பயன்கள்                        

 ஜோதிடர் வேல்முருகன்

 

வீட்டிலோ அல்லது கோவிலிலோ கடவுளிடம் பிரார்த்தனையின்போது விளக்கேற்றி வழிபடுகிறோம். அந்தக்காலத்தில் விளக்கு ஏற்றுவதற்கு முக்கியமான  காரணம் இருட்டை நீக்கி ஒளி பெறுவதற்காகத்தான். விளக்கின் வெளிச்சத்தில் கடவுளைத் தரிசனம் செய்ய விளக்கு பயன்பட்டது. தற்காலத்தில் நவீனமான பிரகாசமான மின்விளக்கின் ஒளியே அதிகமாக இருப்பதால் சம்பிரதாயமாக விளக்கு ஏற்றப்படுகிறது. நேற்று பயன்படுத்திய அதே திரியை பெரும்பாலோர் விளக்கேற்ற மறுபடியும் பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். இறைவனுக்கு ஒருமுறை நிவேதனம் செய்யப்பட உணவுப்பண்டங்கள், பழங்கள், பால், மலர்கள், மாலைகள் ஆகியவற்றை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. அதைப்போலவே ஒருமுறை விளக்கெரியப் பயன்படுத்திய திரியை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் புதிய திரியைக் கொண்டே விளக்கேற்றவேண்டும்.

 

பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி நமக்கும் இறைவனுக்கும் ஒரு தூதனாகச் செயல்படுகிறது. நம் பிரார்த்தனைகளை கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு செல்லும் தூதனாக அக்னி செயல்படுவதால் வெளிச்சத்திற்காக மட்டுமின்றி நம் எண்ணங்கள் இறைவனிடம் சென்று அடைவதற்காகவே  நாம் விளக்கேற்றுகிறோம். இதனால்தான் திருமணதின்போதும் ஹோமங்கள் செய்து அக்னி சாட்சியாக திருமணங்கள் செய்யப்படுகிறது. திருமணச் செய்தி இறைவனிடம் அக்னியின் மூலமாக சென்று சேர்கிறது. ஹோமம் என்பது அதிகப் பொருள் செலவில் செய்யப்படும் பிரார்த்தனை. விளக்கேற்றுதல் சுலபமான எளிமையான பிரார்த்தனை. நம் பிரார்த்தனைகள் நிறைவேற வீட்டிலும், கோவிலிலும் புதிய திரியைக் கொண்டு விளக்கேற்றி இறைவனின் அருளைப் பெறுவோம்!

Benefit of lighting lamp during prayer

Lighting lamp during prayer is very essention to make our prayer effective.  We transfer our prayer through light to God.  

by Swathi   on 27 Jul 2012  0 Comments
Tags: light   lamp   prayer   god   message   messenger   reuse of lamp  
 தொடர்புடையவை-Related Articles
கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன் கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன்
பச்சை ரத்தம் குடித்திருக்கிறீர்களா!! பச்சை ரத்தம் குடித்திருக்கிறீர்களா!!
கேழ்வரகு கோதுமை ரவை இட்லி கேழ்வரகு கோதுமை ரவை இட்லி
ஹிக்ஸ் போஸன் கடவுளின் அணுத்துகள் என்பது உண்மையா? ஹிக்ஸ் போஸன் கடவுளின் அணுத்துகள் என்பது உண்மையா?
குறுஞ்செய்தி குறுஞ்செய்தி
இரவில் தூங்கும் போது இரவு விளக்கு பயன்படுத்தலாமா? ஹீலர் பாஸ்கர் இரவில் தூங்கும் போது இரவு விளக்கு பயன்படுத்தலாமா? ஹீலர் பாஸ்கர்
பூமியை விட இரண்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு !! பூமியை விட இரண்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு !!
பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.