அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த
நிலையை அடைவார்கள்: அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும்
வலையில் சிக்கியவர்களாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பற்றுக்களைத் துறப்பதுதான் துறவறம்) பற்றுக்களை யெல்லாம் முற்றும் விட்டொழித்தவர்களே துறவு நிலை அடைந்தவர்கள். பற்றுக்களை ஒழிக்காமல் துறவறத்திலிருக்கும் மற்றவர்கள் பிறவித் துன்ப வலைக்குள் அகப்பட்டிருப்பவர்களே யாவார்கள்.
Translation
Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net
Explanation
Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.