LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

தங்க மீன்கள் - திரை விமர்சனம் !

நடிகர், நடிகைகள் : ராம், சாதனா, ஷெல்லி கிஷோர்

 

இசை : யுவன் சங்கர் ராஜா

 

இயக்கம் : ராம்

 

தயாரிப்பு : கெளதம் வாசுதேவ் மேனன்

 

பள்ளிக்கட்டணத்தையே செலுத்த முடியாத தந்தையிடம், மகள் ஆசை ஆசையாக வோடபோன் நாயைக் கேட்டால் என்னவாகும் என்பதே படத்தின் முழு கதை.

 

பாத்திரக்கடையில் பாலிஸ் போடும் வேலை பார்க்கிறார் ராம், அங்கு ஆறு மாத சம்பள பாக்கி இருந்தாலும், மகளுக்காக வேலை பார்க்கிறார். இதனால் மகளின் பள்ளிக் கட்டணத்தை கட்டமுடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் குடும்பச் சூழ்நிலை காரணமாக கேரளாவுக்கு செல்கிறார் ராம். திரும்பி வர நினைக்கும் போது மகள் வோடபோன் நாய்க்குட்டி வேண்டும் என கேட்கிறாள். நாய் குட்டி விலை சுமார் ஆயிரம், ரெண்டாயிரம் இருக்கும் என நினைத்து ராம் கடைக்கு போக, அங்கு நாய் குட்டியின் விலை 25,000 என்றதும் அதிர்ந்து போகிறார். இந்நிலையில் மகளோ , அப்பா நாய் குட்டி வாங்கி வரமாட்டார் என நினைத்து குளத்தில் விழுந்து, இறந்து,  தங்க மீனாகி விடலாம் என முடிவு செய்கிறார்.  இறுதியில், மகள் தங்க மீன் ஆனாளா அல்லது ராம் நாய்க்குட்டி வாங்கி வந்து மகளை மீட்டார என்பது தான் படத்தின் மீதி கதை.

 

ராம் தந்தை கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்திருக்கிறார். அவரை தவிர வேறு யாரையாவது, அந்த கதாபாத்திரத்தில் போட்டிருந்தால் அவ்வளவு நன்றாக இருந்திருக்காது. ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர்ம் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

 

படத்தில் ராமின் மகளாக வரும் சாதனா, வெள்ளந்தியான பேச்சுகளாலும், எதார்த்த நடிப்புகளாலும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார். சாதனாவின் தோழியாக வரும் சஞ்சனா கூட அருமையாக நடித்திருக்கிறது. 

 

படத்தின் வசனங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறது. அதிலும் "நானும் தங்க மீனாகலாமுனு தான் நெனச்சேன்.ஆனா எங்க வீட்டுல இன்னிக்கு பூரி சுட்டுருக்காங்க.. அதுனால நான் தங்க மீனாகல .....' நீ தங்க மீனான நான் பொரியெல்லாம் கொண்டு வந்து போடுவேன்" என்பது போன்ற வசனங்கள் படத்தை மேலும் மெருகேற்றுகின்றன. 

 

ராமின் அப்பாவாக வரும் பூராம், தனது உணர்ச்சி பூர்வமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. 

 

மொத்தத்தில் தங்க மீன்கள் - தந்தை மகளின் பாசத்தை பிரதி பளிக்கும் வின்மீன்கள் !!!

by Swathi   on 30 Aug 2013  0 Comments
Tags: Thanga Meengal                    
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.