LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா

வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை

 அறிமுகம்:

          வடுவூர் கிராமத்தில் பிறந்தவர்  திரு. சின்னத்துரை அவர்கள் ஆவார். தாய் மொழியான தமிழ் மொழியில் தம் பள்ளி படிப்பை படித்த இவர், இளங்கலை வேளாண் பிரிவை எடுத்து படித்தார். பின்பு தன் விடா முயற்சியால் முதுகலை படிப்பை படித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிபுரிந்து வந்தார். பின்பு பெல்ஜியம் நாட்டில் ஆய்வு படிப்பு மேற்கொள்வதற்காக சென்றார். அங்கு 15 மாதங்கள் பணிபுரிந்தார். நுண்ணுயுரியல் துறையில் முனைவர் பட்ட படிப்பை முடித்தார். 1986ம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக சவுதி மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சின்னத்துரை குடும்ப அறக்கட்டளை:

          22 வருடங்களுக்கு முன்பு திரு. சின்னத்துரை அவர்கள் தமது முதல் மனைவியின் இறுதிச்சடங்கிற்காக இந்தியா சென்ற போது, தனது கிராமத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளியில் ஆய்வுக்கூடங்கள் இல்லாததால் 10 மைல் தூரம் தொலைவில் இருக்கக்கூடிய பள்ளிக்குச் சென்று அங்கே ஆய்வு செய்யும் சூழல் இருப்பதை கண்டார். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கு அலுவலக அறை சரியாக இல்லை என்பதையும் அறிந்தார். எனவே அன்றைய காலகட்டத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவு செய்து Chemistry Lab, Physics Lab, Botany Lab, Faculty Room ஆகியவற்றை கட்டித்தந்தார். அந்நிகழ்வு தமக்கும், தம் குடும்பத்திற்கும் மிகுந்த மனநிறைவைக் கொடுத்ததாக திரு. சின்னத்துரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதற்கு பிறகே, ‘சின்னத்துரை குடும்ப அறக்கட்டளை’ என்ற ஒன்றை தொடங்கினார். சென்ற ஆண்டு அக்கிராமத்திற்கு சென்ற போது தகுதியிருக்கும் பல மாணவர்கள் பொருளாதார சூழல் காரணமாக தாம் விரும்பியதை படிக்க முடியாமல் வேறு ஒரு பாடப்பிரிவை எடுத்து படிப்பதை கண்டார். எனவே அவர்கள் உயர்கல்விக்கு உதவும் வகையில் நிதியுதவி அளித்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

உழைப்பினால் உயர்ந்தவர்:

          உழைப்பினாலும், முயற்சியினாலும் எந்த தடைகளையும் ஒருவன் முறியடித்து விடலாம் என்று கூறுகிறார் திரு. சின்னத்துரை அவர்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அயல்நாட்டில் வசித்து வரும் இவரின் சிந்தனைத்திறன் தமிழ்மொழியையே அடிப்படையாகக் கொண்டது எனக் கூறுகிறார். ‘முன்னேறுவதற்கு மொழி ஒரு தடையல்ல’,. தாய்மொழியில் மட்டுமே சிறப்பாக சிந்திக்க முடியும் என்றும் கூறுகிறார். இரவு பகல் பாராது, விழா நாட்களில் கூட விடுமுறை எடுக்காமல் கடின உழைப்பை முதலீடாக்கி படித்த இவர், .இன்றைய இளைஞர்களுக்கு வாழும் உதாரணமாக உள்ளார்.

கொடுப்பதில் கிடைக்கும் இன்பம்;

          பிறருக்குக் கொடுக்கும் போது அதனால் கிடைக்கும் இன்பம் அளப்பரியது என்று கூறுகிறார் திரு. சின்னத்துரை அவர்கள். அந்த இன்பத்தை இவரும் இவரது குடும்பமும் முழு மனதுடன் அனுபவிக்கின்றனர். இந்த இன்பம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற  சுயநலத்திற்காக கூட மேலும் மேலும் உதவ முன்வருவதாக கூறுகிறார். பிறருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தல் கூட அந்த நேரத்திற்கே அவர்களுக்கு பயனை அளிக்கும். ஆனால் ஒருவனுக்கு அளிக்கப்படும் கல்வியானது அவனது தலைமுறையை மட்டுமல்ல, அவனை சுற்றியிருப்பவரையும் காப்பாற்றும் என்பதால் தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவுவதாகக் குறிப்பிடுகிறார். இவர் கற்ற கல்வியால் தான் இன்று இவரது கிராமம் நல்ல கல்வியை கற்றுக் கொண்டிருக்கிறது. இவரால் முன்னேற்றம் அடைந்த மாணவர்கள் மேலும் பல மாணவர்களை முன்னேற்றுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

by Lakshmi G   on 30 Mar 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.