ஒவ்வொரு குழந்தையும் அது வளரும் சூல்நியை பொறுத்து அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. எனவே பெற்றோர்கள் அந்தக் குழந்தையின் வளர்ப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு எதையெல்லாம் கற்று கொடுப்பது பற்றி இங்கு காண்போம்.
ஒரு குழந்தை பாராட்டி வளர்க்கப்பட்டால், அது பிறரை போற்ற, வாழ்த்தக் கற்றுக் கொள்கிறது.
ஒரு குழந்தை குறைகள் சொல்லியும் விமரிசக்கப்பட்டும் வளர்க்கப்பட்டால், அது பிறரைப் பழிப்பதைக் கற்றுக் கொள்கிறது.
ஒரு குழந்தை உற்சாகத்துடன் ஊக்கமும் தந்து வளர்க்கப்பட்டால், அது தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்கிறது.
ஒரு குழந்தை கேலி கிண்டல் செய்து வளர்க்கப்பட்டால், அது பிறரை கண்டு வெட்கப்பட்டு விலகி நிற்கக் கற்றுக் கொள்கிறது
ஒரு குழந்தை பகை எதிர்ப்பு உணர்வோடு வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் சண்டை போட கற்றுக் கொள்கிறது.
ஒரு குழந்தை சகிப்புத் தன்மையுடன் வளர்க்கப்பட்டால், அது பொறுமையை கற்றுக் கொள்கிறது.
|