LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

சுவாரசிய தகவல்கள்

சுவாரசிய தகவல்கள்

 

 

எடுத்து எழுதிய நூல்- “வரலாற்றில் சில தேன் துளிகள்”

எழுதியவர்         -   திராவிடமணி மிசா.தோப்பூர் திருவேங்கடம் (ஆசிரியர் தென்புலம்)

பதிப்பகம்-தென்புலம், வேலூர்-632001

பதிப்பு- 2000 அக்டோபர்

         இவரது நூலில் கிடைத்த சில சுவாரசிய தகவல்கள்

 

அமெரிக்க சுதந்திர போர்

1763 ம் ஆண்டு “மூன்றாம் ஜார்ஜ்” அரசன் அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தின் கவர்னராக ஒரு இளைஞனை வழக்கறிஞனாக தொழில் செய்து கொண்டிருந்தவனை நியமித்தான். அந்த இளைஞர் மிகவும் பாராட்டும்படி நடந்து கொண்டான். 1776 வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்தான் அந்த இளைஞன்.

   அமெரிக்காவில் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி நடப்பதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்த நேரம், இந்த இளைஞன் ‘பெனிசில்வேனியாவில்’ பிறந்திருந்தாலும் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு மிக அனுதாபியாக இருந்தான்.

   இதனால் அமெரிக்காவின் புரட்சி நடவடிக்கைகளை ஆங்கில அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தும் வண்ணம் இருந்தான். ‘அமெரிக்கா சுதந்திர போர்’ துவங்கியவுடன் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு ஆதரவாகவே நடந்து கொண்டான்.

   அமெரிக்க விடுதலை வீர்ர்கள் இவனை ‘தேச துரோகி’ என வர்ணித்து இவரை பிடிப்பது என்று முடிவெடுத்தனர். அமெரிக்க விடுதலை சுதந்திர பேரவை உறுப்பினர்கள் இவரை கைதும் செய்து விட்டார்கள் 1978 வரை வைத்திருந்தவர்கள், இங்கிலாந்துக்கும், அமெரிக்காவிற்கும் ‘கைதிகள் பரிமாற்றத்தில்’ இங்கிலாந்திடம் ஒப்படைத்து விட்டனர்.

   ஏன் இவரை தூக்கிலிடவில்லை,  ஏன் உயிருடன் பிழைத்து போகும்படி விட்டு விட்டனர்?

    காரணம் அமெரிக்க தேசப்பற்றாளரும், அமெரிக்க மக்களால் கொண்டாடப்படுபவரும், மிக்க மேதையான “பெஞ்சமின் பிராங்க்ளின்” மகன் என்பதாலேயே.

 

இந்த கவர்னரின் பெயர் வில்லியம் பிராங்க்ளின்.

 

 

 

 

கருப்பு ரோஜா முதல் உலகப்போருக்கு வழி வகுத்தது

 

   1913 ஆஸ்ட்ரியா நாட்டை சேர்ந்த பிரபு, ‘டச்சு நாட்டு’ தோட்டக்கலை வல்லுநரை அழைத்து தன் அரண்மனையில் கருப்பு ரோஜா பயிரிட சொல்கிறார்.

   கருப்பு ரோஜாவை வியன்னாவாசிகள் வெறுத்தனர், அதனை கண்டு அருவருப்பும் அடைந்தனர். அது மட்டுமல்ல ‘கருப்பு ரோஜா’ உற்பத்தி ஆகும் போதெல்லாம் பெரும் பேரழிவும் ஏற்படுவதாக நம்பினர். பிரபுவிடம் கெஞ்சினார்கள், அந்த தோட்டக்கலை நிபுணரை அனுப்பி விட சொன்னார்கள். பிரபுவோ, இவர்களை மூடபழக்க எண்ணம் கொண்டவர்கள் என்று கேலி செய்து கருப்பு ரோஜாவை பயிரிட்டார்.

   சிறிது நாட்கள் கழித்து ஆஸ்ட்ரியாவை விட்டு பிரபுவும் அவர் மனைவியும் வெளி நாடு சுற்றுலா கிளம்பினார்கள். எங்கும் வரவேற்பு. திறந்த ‘கோச்சு வண்டியில்’ இருவரும் நின்றபடி வரவேற்ற மக்களை வணங்கி தலை தாழ்த்திய போது ஒருவன் பிரபுவையும், அவர் மனைவியையும் சுட்டு கொன்று விட்டான்.

   சுட்டு வீழ்த்தப்பட்ட பிரபு ‘ஆர்ச்டூயூக் பிரான்சிஸ் பெர்டினாண்டும்’, அவர் மனைவியான ‘சோபியா சீமாட்டியும்’ ஆவார்கள். ஆஸ்திரிய அங்கேரிய வாரிசாக இருந்தவர். சுடப்பட்ட இடம் ‘செராஜிவோ’, செர்பியா. 1914 ஆம் ஆண்டு ஜூன் 28ம் நாள் அந்த இரண்டு துப்பாக்கி குண்டுகள் முதல் உலகப்போருக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

 

சட்டத்தை பணிய வைத்த மேதை

 

    சார்லச் பிராட்லா, ஒரு நாத்திகவாதி, அந்த நாத்திகத்தினாலே அரசியல் சட்ட வரலாற்றில் அழியா புகழ் பெற்று விட்டார்.

    ‘நார்த்தாம்டன்’ பகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  அவர் பழுத்த நாத்திகவாதியாகையால் கையில் பைபிளை வைத்து “கடவுளே என்னை காப்பாற்று” என்ற வாசகத்தை சொல்லி பதவி ஏற்க மறுத்து விட்டார். இருந்தாலும் தான் மக்களால் தேர்ந்தெடுத்தவராகையால் பாராளுமன்றத்தில் உட்கார வேண்டுமென்றார். அவர் முறைப்படி உறுப்பினராக பதவி ஏற்காதவராகையால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட்தாக அறிவிக்கப்பட்டார்.

   மீண்டும் தேர்தல் நடைபெற்றது, அத்தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார்.அந்த முறையும் அவர் பைபிளை வைத்து பதவி ஏற்கவில்லை, மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

   மூன்றாவது முறையும் தேர்தல் நடைபெற்றது. அதிலும் இவரே வெற்றி பெற்றார். இங்கிலாந்து நாட்டு பிரதமர் ‘கிளாட்ஸ்டோன்’ திகைத்தார்.

   பிராட்லோ பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மரபுகளை மீறினார் என்று அவருக்கு 36 மணி நேரம் சிறை வைத்தார்கள்.இதனால் கிளர்ச்சியும் நடந்தது. அதனால் சட்டத்தை சிறிது தளர்த்தினார்கள், பைபிளை வைத்து கொண்டு உறுதிமொழி எடுக்க வேண்டியதில்லை என்று சட்டத்தை திருத்தினார்கள். இதனால் பிராட்லா பாராளுமன்றத்தில் உட்கார்ந்து பணி செய்ய ஏதுவாயிற்று.

    இதிலிருந்து சட்டத்தை மாற்ற வன்முறையில் ஈடுபடாமலேயே வெற்றி பெற முடியும் என்பதை காண்பித்து காட்டினார் சார்லச் பிராட்லா.

 

 

 

 

 

அமெரிக்க ஜானாதிபதி கால்வின் கூலிட்ஜ்

 

    1920ம் ஆண்டு அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ‘கால்வின் கூலிட்ஜ்’ என்பவர், இவர் 1924 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பிய போது, தேர்தலுக்காக நாடு முழுவதும் சுற்றுவதை வெறுத்தார். ஆனால் பத்திரிக்கை மூலம், வானொலி மூலம் பிரச்சாரம் செய்யும் உத்தியை கையாண்டார். வாஷிங்டன் நகரிலேயே தங்கியிருந்து, வானொலி பிரச்சரத்தை முடுக்கி விட்டு எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக வேட்பாளரை விட மூன்று மடங்கு ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

 

ஜார்ஜ் வாஷிங்டன்

   முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாஷிங்டன். இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாவது முறையும் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் போட்டியிட மறுத்து விட்டு ‘ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும்’ என்று ஒரு சம்பிரதாயத்தை உருவாக்கினார். வெர்னான் பகுதியில் தன்னுடைய தோட்டத்தில் தங்கி ஓய்வு பெற்றார்.

    அவர் சுதந்திர போரில் பங்கு பெற்றதில் முதலாவதாகவும், ஜனாதிபதி பதவி வகித்ததில் முதலாவதாகவும், மக்கள் மனதில் முதலாவதாகவும் கடைசி வரை இருந்தார்.

 

 

தபால் தலை ஒட்டுவது

 

    ஒரு நாள் ‘கோலிரிட்ஜ்’ கிராமத்தில் ஒரு விவசாயினுடைய மனைவி (விதவை) தபால்காரனுடன் நடத்திக் கொண்டிருந்த விவாதத்தை ‘வேர்ட்ஸ் வொர்த்’ பார்த்தார், அந்த காலத்தில் அவரவர்களுக்கு வரும் தபாலை கட்டணம் தபால்காரரிடம் கட்டிய பின்புதான் அவரிடம் இருந்து கடிதத்தை வாங்கி படிக்க வேண்டும். இல்லையென்றால் கடிதம் அனுப்புபவர் அனுப்பும் இடத்தில் கொடுக்க வேண்டும்.

    அப்படி அந்த விவசாயி மனைவி தபால்காரரிடம் தன்னுடைய மகன் அனுப்பிய கடிதத்தை வாங்க மறுத்து விவாதம் செய்தாள். காரணம் தன்னிடம் கட்டணம் செலுத்தி வாங்கும் அளவுக்கு வசதியில்லை என்று வாதிட்டாள்.

   ‘வேர்ட்ஸ்வொர்த்’ அந்த பெண்ணின் மீது பரிதாப்ப்பட்டு அந்த கடித்ததிற்காக கட்டணத்தை இவரே தபால்கார்ரிடம் செலுத்தி அந்த கடிதத்தை பெற்று அந்த பெண்ணிடம் கொடுத்தார்.

   தபால்காரர் சென்றபின் அந்த பெண் இவரிடம் சண்டையிட்டாள், எதற்காக ஒரு பென்னி பணத்தை செலவு செய்தீர்கள்? நான்தான் தபால் வாங்கமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேனே.

    பரவாயில்லை, ஒரு பென்னிதானே, இந்த கடிதம் முக்கியமல்லவா, உன் மகனிடம் இருந்து வந்திருக்கிறதே..!

    அந்த பெண் அந்த கடிதம் வெறும் வெற்று பேப்பர்தான், எனக்கும் என் மகனுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது, அவன் ‘தான் செளக்கியமாய்’ இருப்பதை தெரிவிக்க கட்டணம் செலுத்தாமல் வெற்று காகிதத்தை அனுப்பி வைப்பான், நான் கட்டணம் செலுத்த முடியாது என்று அந்த கடித்த்தை திருப்பி அனுப்பி விடுவேன். இதில் மகன் செளக்கியமாய் இருப்பதை அறிந்து கொண்டு விடுவேன் என்றாள்.

   அதிர்ச்சியான ‘வேர்ட்ஸ்வொர்த்’ இப்படி கூட ஏமாற்று வழி இருக்கிறதா, இந்த தபால் துறையில், என்று இங்கிலாந்தில் தபால் இலாகா தலைவராக இருந்த அவனுடைய நண்பரான ரவுலண்டில் என்பவரை சந்தித்து இந்த குறைகளை சமர்ப்பிக்க, அதன் பின்னரே 1839ம் ஆண்டு முதல் ‘பென்னி தபால் முறை சட்டமாக’ வந்தது. தபாலில் ‘ஒரு பென்னி’ தபால் தலை ஒட்டி அனுப்பினால்தான் தபால் போய் சேரும் என்னும் முறை வந்தது.

 

சிறைச்சாலையில் எழுதிய புத்தகங்கள்

 

பண்டிட் நேரு- “மகளுக்கு எழுதிய மடல்” “தன் வரலாறு” இரண்டும் எழுதப்பட்டது

 

இராஜகோபாலாச்சரியார்- வேலூர் சிறை-சாக்ரடீஸ் பற்றி தமிழில், “சிறையில் தவம்”, ஒவ்வொரு நாள் குறிப்பும் எழுதி வைத்திருந்தார்.

 

மெளலான அப்துல்கலாம் ஆஜாத்- ராஞ்சி நகர் சிறை- “குர்ரான்” மத நூலுக்கு விரிவுரையும், ஆய்வுரையும் எழுதினார்.”டாஜ்கீரா” என்கிற தம் நினைவுகளையும் குறித்து ஒரு நூல் எழுதினார்.

 

பாபு ராஜேந்திர பிரசாத்- “வாழ்க்கை வரலாறு என்னும் நூல்-இதை பற்றி சுவாரசிய தகவ்ல் உண்டு. அவர் முதல் ஜனாதிபதியாக இருந்த போது இங்கிலாந்து ராணிக்கு அன்பளிப்பாக அளிக்க அவர் இவ்வளவு பெரிய நூலை எழுத உங்களுக்கு எழுத எப்படி நேரம் கிடைத்தது? என்று கேட்க இவர் அம்மையீர் உங்கள் தந்தையார் எங்களுக்கு ஓய்வு கொடுக்க சிறையில் அடைத்தார், அந்த நாட்களில்தான் எங்களால் எழுத முடிந்தது, என்றாராம்.

 

பட்டாபி சீதாராமையா- “இந்திய தேசிய காங்கிரசின் வரலாறு”

 

பாலகங்காதர திலகர்- மாண்டலே சிறை (மியான்மரில் இருக்கிறது)- “கீதா ரகசியம்”

 

ஜெயப்பிரகாஷ் நாரயணன்- “சிறை குறிப்புகள்”

 

சர்வால்டர் ராலி இங்கிலாந்து நாட்டில் முதலாம் ஜேம்ஸ் மன்னருக்கு நண்பர், அதன் பின் தேச துரோக குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்பொழுது எழுதிய நூல்- “உலக வரலாறு”

 

செர்வாண்டிஸ்- ஸ்பெயின் நாட்டு நாவலாசிரியர்- புகழ் பெற்ற நகைச்சுவை நவீனம்

 

லானியல்டீபோ (இங்கிலாந்து) – “ராபின்சன் குருசோவை” உலகபுகழ் பெற்ற நாவல்.

 

நெப்போலியன்

நெப்போலியன் முதலில் “எல்பா” தீவிலிருந்து தப்பி பாரீஸ் நகருக்குள் நுழைகிறான். படை வீர்ர்கள் அவனை நகரின் எல்லைக்குள் நுழையாமல் தடுக்க முன் வருகிறார்கள். அத் தருணத்தில் தன் படை வீர்ர்களை பார்த்து கூறுகிறான் “என்னுடைய வீர்ர்களே உங்களில் யாராவது உங்கள் தந்தையை துப்பாக்கியால் சுடுவதற்கு முன் வருவீர்களா? வாருங்கள் என்று தன் மார்பை திறந்து காட்டினான். அப்படை வீர்ர்கள் அவ்வார்த்தைக்கு கட்டுப்பட்டு கடைசியாக பதவி துறந்து செயிண்ட் ஜெலீனா தீவுக்கு செல்லும் வரையில் அவன் ஆணையை மேற்கொண்டார்கள்.

 

ஆப்ரகாம் லிங்கனின் வெற்றியும் அவர் மகனின் தோல்வியும்

 

     லிங்கன் மிகச்சிறந்த பேச்சாளர், அவரது பேச்சை கேட்க நுழைவு கட்டணம் கட்டி விட்டு வரும் அளவுக்கு மிகச் சிறந்த பேச்சாளர். ஒரு முறை லிங்கனுக்கு பண முடை, புரூக்லின் என்னும் இடத்தில் ‘பிளிமவுத் மாதா’ கோயிலில் உரையாற்ற் இரு நூறு டாலர் பெற்று கொண்டார். அந்த இடத்திற்கு அருகில்தான் லிங்கனின் மகன் ஆர்வார்ட் பல்கலை கழகத்தில் நுழைவு தேர்வு எழுதும் தருணத்தை எதிர்பார்த்து படித்து கொண்டிருந்தான், அதில் தேறவில்லை என்பதால் “நியூ ஆம்ப்ஷ்யர் பிலிப்ஸ்” கல்வி கூட்த்தில் சேர்ந்து பயின்று வந்தான். அவனை காண அங்கு வந்த லிங்கன், அந்த தருணத்தை பயன்படுத்தி அங்கெல்லாம் தன்னுடைய சிறப்பான சொற்பொழிவையும் நடத்தி விட்டாராம்.

    லிங்கனின் மகன் ‘ராபர்ட் லிங்கன்’ அடிக்கடி கூறிக்கொள்வாராம், தான் ஆர்வார்ட் பல்கலைகழக நுழைவுத்தேர்வில் தோல்வியுற்றதினாலேயே தன் தந்தை லிங்கன் நியூயார்க், நியூ இங்கிலாந்து, போன்ற நகரங்களுக்கு வந்து சொற்பொழிவாற்றினார். இல்லை என்றால் லிங்கன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார், இப்படி சொல்லி மகிழ்வாராம் லிங்கனின் மகன்.

Interesting News
by Dhamotharan.S   on 25 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.