மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர், கதா நாயகன், வில்லன், இயக்குனர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜே.கே.எம்.பாக்ஸிங் கிளப் செயலாளர் மற்றும் பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மான் கராத்தே திரைப்படத்தில் உலக புகழ்பெற்ற குத்துச்சண்டையை இழிவு படுத்தும் வகையில் வசனம் உள்ளது. எனவே படத்தின் இயக்குனர் திருக்குமரன், கதாநாயகன் சிவகார்த்திகேயன், வில்லன் நடிகர் வம்சி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வரும் மே 30ம் தேதி, மான் கராத்தே பட இயக்குனர், கதா நாயகன், வில்லன், தயாரிப்பாளர் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
|